துப்பாக்கி முனையில் சுப்ரியண்ட்

  • 11

கடற்கொள்ளையர்களின் புதையல்
【The treasure of pirates】
【பாகம் 17】

ஐரிஸுக்கு தகவல் கிடைத்து விட்டது. அவள் அதை செயற்படுத்த போகிறாள் என்பதை அறியாமலேயே யுவான் ஆய்வு கூடத்துக்குள் நுழைந்தான். ஆனால் அவன் எதிர்பாராத ஒன்று அங்கு நிகழ்ந்து கொண்டிருந்தது. அதற்கிடையில் ஐரீஸும் நண்பர்களும் நீருக்குள் சுழியோடி சென்றிருந்தனர். வழக்கம் போல சைகைகளுடன்கூடிய செயற்பாடுகள் தொடர்ந்தன. மீன்களை ஆராய்ச்சி கூடத்துக்கு மேலே தூக்கும் நீர்வழி ஊடாக நீருக்குள் ஊடுருவி வீடியோ எடுக்கும் கேமரா கருவிகள் இறக்கப்பட்டு கொண்டிருந்தன.

யுவானுக்கு இங்கே என்ன நடக்கின்றது என்று புரியவில்லை. அங்குநின்று கொண்டிருந்த சுபிரீயண்ட் கிட்டேயே விஷயத்தை கேட்டான்.

“இங்க என்ன சேர் நடக்கிறது. இன்னிக்கி முக்கியமான ஆராய்ச்சி ஒன்னு பண்ணுறதா சொன்னீங்களே?” என்று கேட்டான் யுவான்.

“முக்கியமான ஆராய்ச்சி தான் யுவான். நம்ம ஆராய்ச்சி கூடத்தில் வெளியாளுங்க யாரோ நுழைஞ்சி இருக்காங்க. இங்கே இருக்குற சீ சீ டீவி கேமராவில் யாரோ ஒரு விஞ்ஞானி. அடிக்கடி கீழ போய் அங்க இருக்குற டெக்னீசியன்களை சந்திச்சிட்டு வர்றான். கரெக்ட்டா அன்னிக்கி ராத்திரியில் தான் ஆராய்ச்சிக்கு வெச்சிருக்கிற மீனுங்க தப்பிச்சிடுது.” என்றான் சுபிரீயண்ட்.

யுவானுக்கு தொண்டையில் தண்ணீர் வற்றி போனது. ஒருவேளை இவன் நம்மள பார்த்து இருப்பானோ என்று சந்தேகம் ஏற்பட்டது.

“இப்போ கேமராக்களை அனுப்பி என்ன பண்ண போறீங்க?” என்று எச்சிலை விழுங்கி கொண்டே கேட்டான்.

“இன்னிக்கி ஆராய்ச்சி என்னு ஒரு புரளியை கிளப்பி விட்டேன் இல்லியா? நம்ம கூட்டத்தில் இருக்குற கறுப்பு ஆடு அதை எப்படியும் அவனுக்கு உதவுறவங்க கிட்ட சொல்லி இருப்பான். இப்போ அவங்க மீன்களை காப்பாற்ற கடலுக்குள் போய்த்தானே ஆகணும். அவங்களை கையும் களவுமா பிடிச்சி கடலோடு ஜலசமாதி ஆக்கிடத்தான். இந்த வாட்டர் புரூப் கேமரா” என்றான்.

அப்படியே தூக்கி வாரி போட்டது யுவானுக்கு. ஆனால் தான் அனுப்பிய செய்தி ஐரிஸுக்கு கிடைத்ததா. அவள் கடலுக்குள் இருப்பாளா? என்ற கேள்விகள் அவனையும் தின்றது. தன்னால் அவர்களுக்கு ஆபத்து வந்துவிட்டதே என்றெண்ணி வருத்தப்பட்டான்.

அதே நேரம் இவர்கள் மூவரும் சுறாமீனின் உதவியோடு பூட்டுக்களை உடைத்து கொண்டு இருந்தனர். தங்களை பிடிப்பதற்காக ஏற்படுத்திய சதி என்று அறியாமல் தங்கள் வேலையில் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட இருபது அரிய கடல்வாழ் உயிரினங்கள் அங்கு அடைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொன்றாக விடுவித்து கொண்டே இருந்தார்கள்.

அப்போது கூண்டுகளில் இருந்து மீனை மேலுயர்த்தும் தூக்கியின் கதவு திறந்தது சிறியதொரு நீர்ச்ச்சுழல் ஏற்பட்டது.

“ஐயோ கதவு திறக்குதே. ஏதோ ஒரு மீனை தூக்க போறாங்க. எதுவாக இருக்கும்.” என்ற யோசனையில் மிதக்க நீருக்குள் இறக்கப்பட்ட கேமராவை கண்டு மூவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

தாங்கள் மாட்டி கொண்டதை உணர்ந்து வேகவேகமாக மீதியுள்ள மீன்களையும் ஐரிஸ் விடுவித்தாள். நண்பர்களுக்கு சைகை காட்டி மேலே செல்ல சொன்னாள். மூவரும் மேலே செல்ல நீந்தினார்கள்.

கணினி திரையில் இவர்கள் மூவரும் அங்கு தெரிய யுவான் பயந்து போனான்.

“புல் ஷிட். நான் நினைச்சேன். இவங்கதான்னு அவங்க மேலே வரத்தானே வேணும். வரட்டும் போங்க போய் அவங்கள தப்பிக்க விடாம பிடிங்க”

என்று சுபிரீயண்ட் கத்த யுவான் தன் சுயரூபத்தை காட்டவேண்டிய நேரம் வந்தது. பாக்கெட் உள்ளே இருந்த ரிவாழ்வாரை எடுத்து சட்டென சுபிரீயண்டை துப்பாக்கி முனையில் மிரட்டினான்.

“அசையாதீங்க யாராவது அசைஞ்சா இவனை சுட்டுடுவேன்.” என்று மிரட்ட ஐரிஸை பிடிக்க செல்ல இருந்தவர்களும் அப்படி அப்படியே நின்றனர்.

“ரெயான் நீ”

“ஸாரி நான் ரெயான் இல்ல. யுவான் போலீஸ் டிடக்ட்டிவ் ஏஜென்ட்” என்றதும் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

“உங்க ஒட்டுமொத்த அட்டூழியங்களை ஆதாரத்தொட எடுக்க வந்தவன்தான் நான். எடு அந்த டேடாஸ் எல்லாம் இருக்குற மெமோரி ஷிப்பை எடு” என்று ஒருவனை மிரட்ட அவனும் பயத்தில் அவற்றை எல்லாம் ஒரு பென்ட்ரைவ்க்கு மாற்றினான்.

“நீ பெரிய தப்பு பண்ணுற யுவான். என்னை விட்டுடு உனக்கு கோடி கோடியாக பணம் தரேன்.” என்று சுபிரீயண்ட் டீல் பேசினான்.

அதே நேரத்தில் இவர்கள் மூவரும் மேலேறி தங்கள் அறைக்குள் ஓடினார்கள். அவசர ஆபத்துக்கள் ஏற்படும் போது தேவைப்படும் என அறிந்து முன்கூட்டியே தயார் நிலையில் இருந்த பயணப்பைகளை மாட்டி கொண்டு இந்த இடத்தில் இருந்து தப்பித்து செல்ல வழியின்றி யோசித்து கொண்டிருந்தனர்.

“உனக்கு ஹெலிகாப்டர் ஓட்ட தெரியுமா?”

என கேட்டாள் ஐரிஸ். அதற்கு ஜிம்சன் தெரியாது என்று சொல்ல. மூவரும் அதில் ஏறி உட்கார்ந்து கொண்டு எப்படி ஓட்டுவது என முயற்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது லெபோரடரி கதவு திறந்தது.

“ஐயையோ! அவங்கல்லாம் வராங்க.” என்று பார்த்தால் யுவான் சுபிரீயண்டை துப்பாக்கி முனையில் மிரட்டி கொண்டு வெளியே வந்தான். அதை பார்த்து மூவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடரும்.
A.L.F. Sanfara

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 17】 ஐரிஸுக்கு தகவல் கிடைத்து விட்டது. அவள் அதை செயற்படுத்த போகிறாள் என்பதை அறியாமலேயே யுவான் ஆய்வு கூடத்துக்குள் நுழைந்தான். ஆனால் அவன் எதிர்பாராத…

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 17】 ஐரிஸுக்கு தகவல் கிடைத்து விட்டது. அவள் அதை செயற்படுத்த போகிறாள் என்பதை அறியாமலேயே யுவான் ஆய்வு கூடத்துக்குள் நுழைந்தான். ஆனால் அவன் எதிர்பாராத…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *