கன்னியின் காலத்தண்டனை

  • 14

ஏன் பிறந்தோம் என்ற
வெறுப்பு அது !
விதியில்!
அதுவும்
பெண்விதியில்

திருத்த முடியாத
சட்டம் அது!
பிறக்கையில் தெரியாது
வளர்கையில் தான் வளைத்திடும்.

என்னவென்று கேட்கிறீரா?
நரம்புகள் நாடிகள்
மேல் நோக்கி
இழுப்பதாய்
ஓர் உணர்வு
வலிக்கிறது !

இன்னும் வலிக்கிறது!
ஆஹ்! அம்மா!
என்ற சினுங்கல்கள்
ஆனால் வாய்
திறக்க முடியவில்லை
நெழிகிறாள்.
உயிர் பிரிந்தாலாவது
வலி அடங்கும் என்று
அதற்கும் ஆயத்தம்
அவள்!

கன்னியின்
காலத்தண்டனை அது!
தானாக நின்றாலும்
நிறுத்திட முடியா
நிரந்தர வலியது!

வெட்கம் தான்!
பெண்கள் என்றால்
இதைக் கூற
வெட்கம் தான்!
ஆனால் தேவையில்லை
ஏனென்றால் தெரியட்டும்
ஆணுக்கும் – அவர்களுக்கு
அனுபவத்தில் உணத்திட
முடியாததை உம் வலியால்
உணர்த்துங்கள்

இது ஒன்றிற்காகவே
மதிக்கட்டும் அவளையும்
அவள் வலியையும்

கவிச்சாரல் சாரா
புத்தளம்

ஏன் பிறந்தோம் என்ற வெறுப்பு அது ! விதியில்! அதுவும் பெண்விதியில் திருத்த முடியாத சட்டம் அது! பிறக்கையில் தெரியாது வளர்கையில் தான் வளைத்திடும். என்னவென்று கேட்கிறீரா? நரம்புகள் நாடிகள் மேல் நோக்கி இழுப்பதாய்…

ஏன் பிறந்தோம் என்ற வெறுப்பு அது ! விதியில்! அதுவும் பெண்விதியில் திருத்த முடியாத சட்டம் அது! பிறக்கையில் தெரியாது வளர்கையில் தான் வளைத்திடும். என்னவென்று கேட்கிறீரா? நரம்புகள் நாடிகள் மேல் நோக்கி இழுப்பதாய்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *