விடை கொடு கொரோனாவே
- by admin
- 11
எதிர் பாரா நேரத்தில்
எரிமலை போல் தோன்றிட்டாய்!
எண்ணற்ற விழிகளில்
ஏமாற்றம் வர வைத்தாய்!
பாவியாய் உருவெடுத்து
பாரினிலே நுழைந்திட்டாய்!
பார் போற்றும் பலருக்கு
பாதகத்தை விளைந்திட்டாய்!
கல்வியும் முடங்கி விட
கற்றவர் கண் கலங்க
காற்றினிலே நீ பரவி
கனவுதனை சிதைத்திட்டாய்!
உறவுகளை பிரித்திட்டாய்!
உழைப்பினையும் முடக்கிட்டாய்!
ஊண் உறக்கமின்றி தவிக்க
உலகை நீ மாற்றிட்டாய்!
ஊரடங்கை பிறப்பித்தாய்!
வீட்டிற்குள் உறங்க வைத்தாய்!
சாலைகளை மூடி விட்டு
சாலை தனில் உலா வந்தாய்!
மதுவினையும் ஒழித்திட்டாய்!
மாந்தரையும் மாற்றிட்டாய்!
உயிர்களையும் கொன்றொழித்து
உடமைகளை தின்றழித்தாய்!
பசிதனையும் உணர்த்திட்டாய்!
பண மதிப்பை அழித்திட்டாய்!
கடைகளை மூடி விட்டு
கண்ணீருடன் வாழ வைத்தாய்!
கொடுமைகளை விட்டு விடு!
கோரிக்கை வைக்கின்றோம்!
கொச்சையாய் நினைக்காமல்
கொரோனாவே சென்று விடு!
நிம்மதியாய் நாம் வாழ
நிஜமாய் நீ வழியை விடு!
வீம்பு நீயும் பிடிக்காமல்
விரைவாய் எமக்கு விடை கொடு!
Shima harees
puttalam
எதிர் பாரா நேரத்தில் எரிமலை போல் தோன்றிட்டாய்! எண்ணற்ற விழிகளில் ஏமாற்றம் வர வைத்தாய்! பாவியாய் உருவெடுத்து பாரினிலே நுழைந்திட்டாய்! பார் போற்றும் பலருக்கு பாதகத்தை விளைந்திட்டாய்! கல்வியும் முடங்கி விட கற்றவர் கண்…
எதிர் பாரா நேரத்தில் எரிமலை போல் தோன்றிட்டாய்! எண்ணற்ற விழிகளில் ஏமாற்றம் வர வைத்தாய்! பாவியாய் உருவெடுத்து பாரினிலே நுழைந்திட்டாய்! பார் போற்றும் பலருக்கு பாதகத்தை விளைந்திட்டாய்! கல்வியும் முடங்கி விட கற்றவர் கண்…