எமக்கான தெரிவு இறைவனிடமே உள்ளது

  • 13

மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பல வடிவங்களில் கவலை, கஷ்டம், துன்பம் போன்றவைகளை அனுபவிக்க நேரிடுவான். அது நாம் ஆசைப்படும் பொருள் அல்லது உறவுகளின் மூலமாவது எம்மை வந்தடையும்.

கிடைக்கப் பெற்றுள்ளதைக்கொண்டு இறைவன் எங்களை சோதிக்க விரும்புகிறான். அல்லது அதை எம்மிடமிருந்து பறித்து நலவை நாடுகிறான் என்பதே நிதர்சனம். இதனால் ஏற்படும் கவலைகளை ‘மனதில் சுமந்து கொண்டு, வெளியில் சிரித்து உள்ளே அழுபவர்கள் நம்மில் இல்லாமல் இல்லை.

அல்லாஹ்வின் பக்கம் மீளுங்கள், அவனின் பக்கம் நெருங்குங்கள், உங்கள் கவலைகளை முறையிடுங்கள். அவனை நேசித்து, நம்பியவர்களை அவன் கை விட்டதாக சரித்திரமே இல்லை. அவன் எது செய்தாலும் நமக்கு நன்மையானதாக இருக்கும். நம்மிடம் இருந்து ஒன்றை அது உறவாக இருந்தாலும் பொருளாக இருந்தாலும் அதை நீக்கினால் அதற்கு பகரமாக அதைவிடச் சிறந்த ஒன்றை வழங்காமல் இருக்கவே மாட்டான்.

இழந்தது எதுவாயினும் அதை விட சிறந்தது கிடைக்கும் என்று  நம்பிக்கை வைக்கவேண்டும். கிடைத்தது எதுவாயினும் அதுவே சிறந்தது என எண்ணி திருப்திக்கொள்ள வேண்டும்.

நீங்கள் ஒன்றை வெறுப்பீர்கள் ஆனால் அது உங்களுக்குச்சிறந்ததாக இருக்கலாம். நீங்கள் ஒன்றை விரும்புவீர்கள் ஆனால் அது தீமையாக இருக்கலாம்.  அல்லாஹ்வோ அறிவான் நீங்கள் அறியமாட்டீர்கள். (ஸூறா பகரா :216 வது வசனம்)

எனவே எமக்கு இறைவன் தந்த இந்த வாழ்க்கையின் பாத்திரம் எப்படி என்பது முக்கியமில்லை. மாறாக கிடைக்கப்பெற்றுள்ளதைக்கொண்டு இறைவனால் தரப்பட்ட பாத்திரத்தை சரியாக அமைத்துக்கொள்வதிலே எமது ஈரூல வாழ்க்கையின் வெற்றி தங்கியுள்ளது.

Faslan Hashim
Islahiyya Arabic collage ®
South Eastern University of Sri Lanka
BA ®️

மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பல வடிவங்களில் கவலை, கஷ்டம், துன்பம் போன்றவைகளை அனுபவிக்க நேரிடுவான். அது நாம் ஆசைப்படும் பொருள் அல்லது உறவுகளின் மூலமாவது எம்மை வந்தடையும். கிடைக்கப் பெற்றுள்ளதைக்கொண்டு இறைவன் எங்களை சோதிக்க…

மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பல வடிவங்களில் கவலை, கஷ்டம், துன்பம் போன்றவைகளை அனுபவிக்க நேரிடுவான். அது நாம் ஆசைப்படும் பொருள் அல்லது உறவுகளின் மூலமாவது எம்மை வந்தடையும். கிடைக்கப் பெற்றுள்ளதைக்கொண்டு இறைவன் எங்களை சோதிக்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *