வீரன்

  • 40

போர்க்களத்தில் வாளேந்திப் போராடுபவன்
மட்டுமே வீரன் அல்ல
அவமானங்களையும் வேதனைகளையும்
புன்னகையுடன் கடந்து
புரட்சி செய்பவன் வீரனே.

துரோகத்தை தூர எறிந்து விட்டு
தூய மனதோடு போராடுபவன் வீரனே
தோல்விகளை தோழனாக்கி
முயற்சிகளின் பின்னால்
முயன்று ஓடுபவன் வீரனே.

இடர்களை விலக்கி விட்டு
தன்னம்பிக்கையுடன் தளராது
நடைப்போடுபவன் வீரனே.

தடைகளை உடைத்து
இலட்சியத்தை நோக்கி
பயணிக்கும் ஒவ்வொரு
மனிதனும் மா வீரனே!

Rushdha Faris
South Eastern University of Sri Lanka.

போர்க்களத்தில் வாளேந்திப் போராடுபவன் மட்டுமே வீரன் அல்ல அவமானங்களையும் வேதனைகளையும் புன்னகையுடன் கடந்து புரட்சி செய்பவன் வீரனே. துரோகத்தை தூர எறிந்து விட்டு தூய மனதோடு போராடுபவன் வீரனே தோல்விகளை தோழனாக்கி முயற்சிகளின் பின்னால்…

போர்க்களத்தில் வாளேந்திப் போராடுபவன் மட்டுமே வீரன் அல்ல அவமானங்களையும் வேதனைகளையும் புன்னகையுடன் கடந்து புரட்சி செய்பவன் வீரனே. துரோகத்தை தூர எறிந்து விட்டு தூய மனதோடு போராடுபவன் வீரனே தோல்விகளை தோழனாக்கி முயற்சிகளின் பின்னால்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *