நட்பு
- by admin
- 6
நட்பு என்ற நந்தவனச் சோலையில்
பல நட்பூக்கள் மலர.
அதில் ஒரு சில நட்பே
இதயத்தில் இடம் பிடிக்கின்றது.
சில இருந்த இடம் தெரியாமலே
தொலைவாகின்றது.
நான் நீரூற்றாமல்
எனது தேசத்தில்
பூத்த நட்பின் மலர் நீ!
உன்னை தாங்கும்
கிளை மட்டும் அல்ல
மரமும் நானாவேன்.
நீ வெறும் பூவல்ல.
எனது நெஞ்சில் நிறைந்த
அன்புத் தோழி நீ.
எனக்காக இறைவன்
கொடுத்த உன்னத உறவு நீ.
உன்னை போன்ற
ஒரு பாசமலரை இனி
தொலைக்கவும் மாட்டேன்.
தொலைந்து போக
விடவும் மாட்டேன்.
இது பல உரிமைகளை
தாண்டிய ஒரு பந்தம்.
உணர்வுகளை
தாங்கிய ஒரு சொந்தம்.
அதுவே நம் நட்பு
Noor Shahidha.
SEUSL.
Badulla.
நட்பு என்ற நந்தவனச் சோலையில் பல நட்பூக்கள் மலர. அதில் ஒரு சில நட்பே இதயத்தில் இடம் பிடிக்கின்றது. சில இருந்த இடம் தெரியாமலே தொலைவாகின்றது. நான் நீரூற்றாமல் எனது தேசத்தில் பூத்த நட்பின்…
நட்பு என்ற நந்தவனச் சோலையில் பல நட்பூக்கள் மலர. அதில் ஒரு சில நட்பே இதயத்தில் இடம் பிடிக்கின்றது. சில இருந்த இடம் தெரியாமலே தொலைவாகின்றது. நான் நீரூற்றாமல் எனது தேசத்தில் பூத்த நட்பின்…