பல்கலை

  • 8

பல திசைகளிலிருந்து
ஆளுமைகளை
ஒரு திசை நோக்கி
ஒன்று சேர்க்கும்
பெருந்திடலாம் பல்கலை.

பள்ளிக் கல்வியை
பக்குவமாய் படித்தாலும்
பண்புடைய ஆளுமைகளை
அடையாளப்படுத்துமிடம் பல்கலை.

ஒரு ஆளுமைக்குள்ளும்
பல கலைகளையும் சங்கமித்து
பல ஆளுமைகளைப்
பிரசவிக்குமிடம் பல்கலை.

மனிதம் எனும் வாசகத்தை
மாணாக்களுக்குள் வலுவூட்டி
வஞ்சனை இல்லாமல்
மனித நேயத்துடன்
சமூகத்தை வளப்படுத்தும்
சமூக சீர்திருத்த வாதிகளையும்
சமூகத்துக்கு வழங்கும் பல்கலை.

பேனா முனையால்
உலகை மாற்றும்
இலக்கிய வாதிகளையும்
துளிர்விடுகிறது பல்கலை.

நாட்டின் முன்னேற்றத்தின்
கருவாம் பொருளாதாரத்தை
செம்மையாக செதுக்கி
எதிர்காலத்தையும் மிளிர்ச்சி செய்யும்
வாண்மையாளர்களையும்
வழங்குகிறது பல்கலை.

கத்தியின்றி ரத்தமின்றி செய்யும்
யுத்தமான அரசியலையும்
நாகரீகமாக நல்லாட்சி செய்யும்
அரசியல்வாதிகளாக நயத்துடன்
தருகிறது பல்கலை.

துறைசார் நிபுணர்களையும்
துல்லியமாக சமூகத்திற்கு
துளிர்விடச் செய்கிறது பல்கலை.

பல வண்ணப் பூக்களால்
மணம் வீசும்
பல்லின சமூகத்தவரிடையேயும்
சமூக நல்லிணக்கத்துடன்
எண்ணங்களால் நல்லிணக்கம்
அடையச் செய்கிறது பல்கலை.

புதிது புனைந்து
புத்தாக்க சிந்தனையோடு
புத்தாக்க படைப்புகளைப்
படைக்கும் படைப்பாளர்களை
தருகிறது பல்கலை.

தொலைதூரமான தொடுவானம்
தொடும் தொழில்நுட்பவாதிகளையும்
தருகிறது பல்கலை.

அறியும் எதனையும்
ஆதாரம் இன்றி
ஏற்காது ஆய்வுடன்
தொலைநோக்கூடாக
சிந்திக்கும் ஆய்வாளர்களை
தருகிறது பல்கலை.

பல்கலைப் படலை
தாண்டியதும் பட்டறிவால்
பட்டை தீட்டிய
பாண்டித்தியவான்களான
பட்டதாரிகளை
பறைசாற்றுகிறது பல்கலை.

N.SOHRA JABEEN
AKKARAIPATTU
SEUSL

பல திசைகளிலிருந்து ஆளுமைகளை ஒரு திசை நோக்கி ஒன்று சேர்க்கும் பெருந்திடலாம் பல்கலை. பள்ளிக் கல்வியை பக்குவமாய் படித்தாலும் பண்புடைய ஆளுமைகளை அடையாளப்படுத்துமிடம் பல்கலை. ஒரு ஆளுமைக்குள்ளும் பல கலைகளையும் சங்கமித்து பல ஆளுமைகளைப்…

பல திசைகளிலிருந்து ஆளுமைகளை ஒரு திசை நோக்கி ஒன்று சேர்க்கும் பெருந்திடலாம் பல்கலை. பள்ளிக் கல்வியை பக்குவமாய் படித்தாலும் பண்புடைய ஆளுமைகளை அடையாளப்படுத்துமிடம் பல்கலை. ஒரு ஆளுமைக்குள்ளும் பல கலைகளையும் சங்கமித்து பல ஆளுமைகளைப்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *