பச்சிளம் குழந்தைகள்

  • 5

அறைக்குள் அன்னை
ஈன்றெடுத்த பொழுது
நாம் அழுத நாளாக
இருக்கட்டும் போதும்

உரிமை இழக்கப்பட்டு
வாதாட வேண்டிய காலம் போய்
உணர்வுகள் இழக்கப்பட்டு
வாதாட வேண்டிய காலம்

இல்லை இல்லை
காலம் பிழையில்லை
காலத்தில் வாழும் மானிடரே!
போதைப் பொருள் தந்து
எங்கள் பாதை இழக்க
வைக்கின்றீர் போதும்

போர்வைக்குள் போற்றிப்
பாதுகாக்கப்பட வேண்டியோர்
நாங்கள்

பெயர் சொல்லித் தரவில்லை
பெற்றோர் பெயர்கெட
வைக்கின்றீர்கள் நீங்கள் போதும்

உங்களுக்கும் சொந்தமுண்டு
உங்களுக்கும் பந்தமுண்டு
யாதும் அறியாதோர் நாங்கள்
எங்கள் கனவிற்கு
சமிக்ஞை காட்டுவோர் நீங்கள்

எங்கள் எதிர்காலத்தை
கலைத்து விடாதீர்கள்
பச்சிளம் குழந்தைகள்
நாங்கள் போதும்

N.SOHRA JABEEN
AKKARAIPATTU
SEUSL

அறைக்குள் அன்னை ஈன்றெடுத்த பொழுது நாம் அழுத நாளாக இருக்கட்டும் போதும் உரிமை இழக்கப்பட்டு வாதாட வேண்டிய காலம் போய் உணர்வுகள் இழக்கப்பட்டு வாதாட வேண்டிய காலம் இல்லை இல்லை காலம் பிழையில்லை காலத்தில்…

அறைக்குள் அன்னை ஈன்றெடுத்த பொழுது நாம் அழுத நாளாக இருக்கட்டும் போதும் உரிமை இழக்கப்பட்டு வாதாட வேண்டிய காலம் போய் உணர்வுகள் இழக்கப்பட்டு வாதாட வேண்டிய காலம் இல்லை இல்லை காலம் பிழையில்லை காலத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *