ஏழையாய் பிறந்து விட்டேன்
- by admin
- 10
ஏழு தினமும் போராட்டத்தில்
ஏட்டுக்கல்வி எட்டாத தூரத்தில்
போராடி தோற்றுவிட்டேன்
யார் செய்த சதி?
ஏன் இந்த கதி?
ஏழையாய் பிறந்து விட்டேன்.
ஆசைகளை அடக்கி விட்டு
கனவுகளை கலைத்து விட்டு
கால் வயிறு கஞ்சிக்கு
கதவோரமாய் கையேந்துகிறேன்.
எட்டிப்பார்ப்போர் சிலர்
ஏறி மிதிப்போர் பலர்
பரந்த இந்தப் பாரினிலே
சுருங்கிப்போன மனித மனங்கள்
ஏழை என்று எள்ளிநகையாடி
எடுத்தெறியும் பிம்பங்கள்.
கிழிந்த ஆடை
காய்ந்த உணவு
நடைப்பாதை வீடு
இதுவே நம் பாடு.
எட்டுத்திக்கும்
எட்டிமிதிக்கும்
கண்களின் ஓரம் கரித்திடும்
எதிர்காலம் சரிந்திடும்
சதா உள்ளம் அழுதிடும்
ஏழையாய் பிறந்து விட்டேன்
ஏன் இந்த நிலை
யார் செய்த பிழை?
Rushdha Faris
South Eastern University of Sri Lanka.
ஏழு தினமும் போராட்டத்தில் ஏட்டுக்கல்வி எட்டாத தூரத்தில் போராடி தோற்றுவிட்டேன் யார் செய்த சதி? ஏன் இந்த கதி? ஏழையாய் பிறந்து விட்டேன். ஆசைகளை அடக்கி விட்டு கனவுகளை கலைத்து விட்டு கால் வயிறு…
ஏழு தினமும் போராட்டத்தில் ஏட்டுக்கல்வி எட்டாத தூரத்தில் போராடி தோற்றுவிட்டேன் யார் செய்த சதி? ஏன் இந்த கதி? ஏழையாய் பிறந்து விட்டேன். ஆசைகளை அடக்கி விட்டு கனவுகளை கலைத்து விட்டு கால் வயிறு…