அன்பை இறைஞ்சாதீர்
- by admin
- 10
நிரந்தரமில்லா உலகிலே
நிலையான அன்பைக் கேட்டேன்!
நிராசையே இறுதியில்
நிலையாக நின்றது.
ஏமாறும் மங்கை மனதிற்கு
ஏமாற்றமில்லா அன்பைக் கேட்டேன்!
ஏமாளியாய் இறுதியில்
ஏங்க என்னை வைத்தது
வாஞ்சையற்ற மனதிலே
வஞ்சனையில்லா அன்பை கேட்டேன்!
வருடி என்னை இறுதியில்
வாட விட்டு சிரித்தது.
பாவமிக்க மாந்தரில்
பகடில்லா அன்பை கேட்டேன்!
பாதி வழியில் என்னையும்
பதற விட்டு சென்றது.
அற்பமான பாரிலே அன்பை நானும்
அழுது கேட்டேன்! – இறைவனின்
அன்பே நிலைபெறும் என்பதை
அன்பே உன்னால் அறிந்து கொண்டேன்.
Shima harees
puttalam
நிரந்தரமில்லா உலகிலே நிலையான அன்பைக் கேட்டேன்! நிராசையே இறுதியில் நிலையாக நின்றது. ஏமாறும் மங்கை மனதிற்கு ஏமாற்றமில்லா அன்பைக் கேட்டேன்! ஏமாளியாய் இறுதியில் ஏங்க என்னை வைத்தது வாஞ்சையற்ற மனதிலே வஞ்சனையில்லா அன்பை கேட்டேன்!…
நிரந்தரமில்லா உலகிலே நிலையான அன்பைக் கேட்டேன்! நிராசையே இறுதியில் நிலையாக நின்றது. ஏமாறும் மங்கை மனதிற்கு ஏமாற்றமில்லா அன்பைக் கேட்டேன்! ஏமாளியாய் இறுதியில் ஏங்க என்னை வைத்தது வாஞ்சையற்ற மனதிலே வஞ்சனையில்லா அன்பை கேட்டேன்!…