நாளைய சந்ததிக்கு நல்வழி காட்டிடுவோம்

  • 14

யுத்தமில்லா தேசத்திற்காய்
நேசத்துடன் கை கோர்ப்போம்!
சாதி மத பேதமின்றி
சமாதானப் புறாக்களை
சாலையெங்கும் பறக்கவிடுவோம்!

நல்லதொரு சமுதாய மாற்றத்திற்கு
குரல் கொடுத்திடுவோம்!
நாளைய சந்ததிக்கு
நல்வழி காட்டி சென்றிடுவோம்!

வேற்றுமைச் சுவர்களை உடைத்திடுவோம்!
வேதனைத் தீயை அணைத்திடுவோம்!
இனபேதம் மொழிபேதம் பேசி
சமுதாயச் சீரழிவை உருவாக்கி
தன்னினத்தை தானே அழிக்கும்
தரங்கெட்ட மனிதர்களுக்கு
தடைக்கல்லாய் நின்றிடுவோம்!

தொண்டன் என்ற பெயரில்
தொலைந்து போகும்
நம் சமூகத்தை காத்திடுவோம்!
நாளைய சந்ததிக்கு
நல்வழிகாட்டி சென்றிடுவோம்!

பிரிவினை பேசி புறங்கூறி
புரிந்துணர்வின்றி பிரிந்து போகாமல்
வாழும் வரை மனதால்
மனிதனாய் வாழ்ந்திடு!

நீ வரலாற்றில் இடம்பிடிக்கத் தேவையில்லை
நல்ல மனிதனாய் வாழ்ந்து
நாளைய சந்ததிக்கு
நல்வழிகாட்டி சென்றிடுவோம்!

மதத்தால் மனம் மாறி
குலத்தால் குணம் மாறி
மனிதத்தை இழந்த மானுடம்
அதை சல்லடை போட்டுத்
தேடிக் கொண்டிருக்கிறது
விலையில்லா மனித உயிர்களை அழித்து
வீண் சண்டை வீண் விவாதம் செய்து
நாம் கண்டது தான் என்ன?

நம் சமுதாய சீரழிவை தடுத்திடுவோம்!
புதியதொரு பாதையில்
பயணத்தை தொடர்ந்திடுவோம்!
நாளைய சந்ததிக்கு
நல்வழிகாட்டி சென்றிடுவோம்!

Fathima Nifra Nijam
Kochchikade,
Negombo.

யுத்தமில்லா தேசத்திற்காய் நேசத்துடன் கை கோர்ப்போம்! சாதி மத பேதமின்றி சமாதானப் புறாக்களை சாலையெங்கும் பறக்கவிடுவோம்! நல்லதொரு சமுதாய மாற்றத்திற்கு குரல் கொடுத்திடுவோம்! நாளைய சந்ததிக்கு நல்வழி காட்டி சென்றிடுவோம்! வேற்றுமைச் சுவர்களை உடைத்திடுவோம்!…

யுத்தமில்லா தேசத்திற்காய் நேசத்துடன் கை கோர்ப்போம்! சாதி மத பேதமின்றி சமாதானப் புறாக்களை சாலையெங்கும் பறக்கவிடுவோம்! நல்லதொரு சமுதாய மாற்றத்திற்கு குரல் கொடுத்திடுவோம்! நாளைய சந்ததிக்கு நல்வழி காட்டி சென்றிடுவோம்! வேற்றுமைச் சுவர்களை உடைத்திடுவோம்!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *