என் முதல் ஆசான்

  • 17

காரிருள் நிறைந்த கருவறையில்
கருணையாய் காத்து
உதிரத்தை உரமாக்கி உணர்வு
ஊட்டிய உன்னத உறவு நீ!

பட்டறிவால் பக்குவப்பட
பண்புடமைகளையும்
சொல்லித்தந்த பண்புடையவள் நீ!

துன்பங்களால் துயருண்டு
துவண்டு விடாதே!
துமியாய் எண்ணி
துணிச்சலோடு சென்றிடு என
தைரியமூட்டிய தைரியசாலி நீ!

உள்ளங்களை புண்பட வைத்துவிடாதே
புன்முறுவலோடு புன்னகை செய்
புதுமைகள் உனைத் தேடிவரும் என்றாய் நீ!

ஏட்டுக் கல்வியையும் எழிலுறக் கற்று
ஏணியாய் எனை ஏறிடச்செய்து
அழகு பார்த்த என் முதல் ஆசான் நீ!
என்றும் நீ நலமுடன் இருக்க
என் பிரார்த்தனைகள்
என்றும் உனைச்சேரும்

N.SOHRA JABEEN
AKKARAIPATTU
SEUSL

காரிருள் நிறைந்த கருவறையில் கருணையாய் காத்து உதிரத்தை உரமாக்கி உணர்வு ஊட்டிய உன்னத உறவு நீ! பட்டறிவால் பக்குவப்பட பண்புடமைகளையும் சொல்லித்தந்த பண்புடையவள் நீ! துன்பங்களால் துயருண்டு துவண்டு விடாதே! துமியாய் எண்ணி துணிச்சலோடு…

காரிருள் நிறைந்த கருவறையில் கருணையாய் காத்து உதிரத்தை உரமாக்கி உணர்வு ஊட்டிய உன்னத உறவு நீ! பட்டறிவால் பக்குவப்பட பண்புடமைகளையும் சொல்லித்தந்த பண்புடையவள் நீ! துன்பங்களால் துயருண்டு துவண்டு விடாதே! துமியாய் எண்ணி துணிச்சலோடு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *