மனைவியின் போராட்டம்
- by admin
- 19
அவனிடத்தில் நான் கேட்பதெல்லாம்
நகை, பட்டு, பணம் அல்ல.
பொய் கலக்காத உறவு மட்டுமே,
ஒரு பொய் அவன் சொல்லுகையில்
அதை தாங்கொன்னா
என் மனம் புலம்புகின்றது.
மாறாக நான் இழுத்து பிடிப்பதாய்
அர்த்தம் அல்ல ஏன் எனில்
என் நம்பிக்கையும் உண்மையும்
அவனாக இருந்ததால் தான்
அவனா? என்னிடம் பொய் சொன்னான் என
அவன் அன்புக்கு மட்டும் இடம் கொடுத்த உள்ளத்துக்கு
பொய் சொன்னான் என்பதை
ஏற்றுக்கொள்ள முடியவில்லை
இது திமிர் என்றால்
என்னளவில் யாரும் பாசம் வைக்க வில்லை என
அர்த்தம் மட்டும் தான்
என்னால் அவர்கள் மத்தியில் சுட்டி காட்டிட முடியும்,
நான் சுவசிக்கும் அவன் மூச்சு
நஞ்சானால் நான் இறந்து விடுவேன் என்று
அவன் மறந்து விட்டான் போலும்
என்னிடம் நீ, நஞ்சான பொய் சுவாசத்தை
ஒரு போதும் சுவாசிக்காதே என்று
நான் சொல்லி அவனுக்குள் நுழைந்ததை மறந்து விட்டான்.
இன்னும் நான் சொல்லும் வார்த்தை
அவன் காதில் நான்
அழும்போது மட்டுமே கேட்கின்றது
அவன் பொய்யை சுவாசிக்கும் போது
என்னை மறந்து விடுகின்றான்
என்னை கொன்று விடுகின்றான்.
நிந்தவூர் றிசாமா
அவனிடத்தில் நான் கேட்பதெல்லாம் நகை, பட்டு, பணம் அல்ல. பொய் கலக்காத உறவு மட்டுமே, ஒரு பொய் அவன் சொல்லுகையில் அதை தாங்கொன்னா என் மனம் புலம்புகின்றது. மாறாக நான் இழுத்து பிடிப்பதாய் அர்த்தம்…
அவனிடத்தில் நான் கேட்பதெல்லாம் நகை, பட்டு, பணம் அல்ல. பொய் கலக்காத உறவு மட்டுமே, ஒரு பொய் அவன் சொல்லுகையில் அதை தாங்கொன்னா என் மனம் புலம்புகின்றது. மாறாக நான் இழுத்து பிடிப்பதாய் அர்த்தம்…