நானும் காதலிக்கிறேன்

  • 8

காதலித்தவர்கள் தான்
கவிதை எழுத வேண்டுமென்றால்
கவிஞர்கள் பலர் இங்கு
தோன்றி இருக்கவே மாட்டார்கள்

பிரிந்தவர்கள் தான்
கண்ணீர் பற்றி
எழுத வேண்டுமென்றால்
தினம் தினம்
இருப்பவர்களை
இறக்கச் செய்திட வேண்டும்.

போதையைப் பற்றி
எழுதுபவரெல்லாம்
அதில் மேதையாகிப்
போனவர் இல்லை.

கண்டதும் கேட்டதுமாய்
கற்பனையில் கரைந்தவருமே
கவிதையை கருவுருகின்றனர்.

நானும் காதலிக்கிறேன்
வியக்காதே வீணாக
சொல்லி விடுகின்றேன்.

நானும் காதலிக்கிறேன்
இயற்கையை – அது
நீ அறியாவிட்டால் மழை.

நானும் காதலிக்கிறேன்
செயற்கையை – அது
நீ தெறியாவிட்டால் பொம்மை.

இதுவெல்லாம் உண்மையா
இல்லை இதுவும் கூட
வெறும் கற்பனையாகலாம்.

அஸானா அக்பர்

காதலித்தவர்கள் தான் கவிதை எழுத வேண்டுமென்றால் கவிஞர்கள் பலர் இங்கு தோன்றி இருக்கவே மாட்டார்கள் பிரிந்தவர்கள் தான் கண்ணீர் பற்றி எழுத வேண்டுமென்றால் தினம் தினம் இருப்பவர்களை இறக்கச் செய்திட வேண்டும். போதையைப் பற்றி…

காதலித்தவர்கள் தான் கவிதை எழுத வேண்டுமென்றால் கவிஞர்கள் பலர் இங்கு தோன்றி இருக்கவே மாட்டார்கள் பிரிந்தவர்கள் தான் கண்ணீர் பற்றி எழுத வேண்டுமென்றால் தினம் தினம் இருப்பவர்களை இறக்கச் செய்திட வேண்டும். போதையைப் பற்றி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *