நட்பின் நேசம்

  • 16

தொடர்ந்து பேசுவது மட்டும்
பாசம் என்றில்லை
தொடரப்படாத பேச்சும் பாசம் தான்.

வெயிலை தினமும் காணும் நம் விழிகள்
மழையை எப்போதாவது தான் காண்கிறது.
அதனால் வெயிலுக்கு மட்டும் தான்
பூமியின் மீது அதிக பிரியம் என்று நினைப்பதா.

ஏன் மழைக்கு நேசமில்லையா?
திடீர் திடீரென்று பெய்யும் மழை தான்
பூமியை தெப்பமாக நனைக்கிறது.
அதற்காக இவ்வளவு நாளும்
மழை பொழியவில்லையே என்று
பூமி எப்போதாவது முகம் சுளித்ததுண்டா?

அல்லது மழைத்துளிகள் தன்னை
தீண்டக் கூடாதென்று குடை பிடித்ததுண்டா?
இல்லையே.

அது போல் தான் சில உறவுகளும்
அவர்கள் அமைதியாகவே இருப்பதால்
அவர்களுக்கு பாசமே இல்லை என்று அர்த்தமாகுமா

சில சமயம் தினமும் பேசும்
இதயங்களை விட
மௌனம் காக்கும் இதயங்களில்
அன்பு அதிகமாக கூட இருக்கலாம்.

பாசத்தை பேச்சை வைத்து
எடை போட கூடாது.
நட்பின் ஆழத்தை வைத்தே
எடை போட வேண்டும்.
மௌனங்களுக்கும் மொழி உண்டு
அதை நீ புரிந்து கொண்டால்!

Noor Shahidha.
SEUSL.
Badulla.

தொடர்ந்து பேசுவது மட்டும் பாசம் என்றில்லை தொடரப்படாத பேச்சும் பாசம் தான். வெயிலை தினமும் காணும் நம் விழிகள் மழையை எப்போதாவது தான் காண்கிறது. அதனால் வெயிலுக்கு மட்டும் தான் பூமியின் மீது அதிக…

தொடர்ந்து பேசுவது மட்டும் பாசம் என்றில்லை தொடரப்படாத பேச்சும் பாசம் தான். வெயிலை தினமும் காணும் நம் விழிகள் மழையை எப்போதாவது தான் காண்கிறது. அதனால் வெயிலுக்கு மட்டும் தான் பூமியின் மீது அதிக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *