மாற்றம் கொண்டால்.

  • 12

இனிமையான வார்த்தைகள்
இதயக் கீறல்களை
இறக்க வைக்கும் போது.

கடல் அலையின் சிதறல்கள்
கருப்புப் பாறைகளை
மண்ணாக்கும் போது.

சூரியனின் ஒளி வீச்சுக்கள்
மண்ணை முட்டி முளைத்து
மரமாக்கும் போது.

மிருக குணங்களின்
நடத்தைக்காய் நீயும்
மனம் உடைந்து
போவதேனோ?

ஐந்தறிவுல்ல ஆந்தையே
ஒளியில் கண் இன்றி
வானில் உலாவ.

மனித மனமே நீ
மதிகெட்டார் வார்த்தைக்காய்
மனமுடைந்து முடங்குவதேனோ?

மாறுதல் கொண்டு
மதியினை வென்று
மனதிலே மன உறுதியை கொண்டு
மறு பிறவி எடுத்து வா.

மதி கெட்ட மாந்தரையும்
மண்ணிலே மடிப்பதற்காய்!

Shima Harees
University of peradheniya

இனிமையான வார்த்தைகள் இதயக் கீறல்களை இறக்க வைக்கும் போது. கடல் அலையின் சிதறல்கள் கருப்புப் பாறைகளை மண்ணாக்கும் போது. சூரியனின் ஒளி வீச்சுக்கள் மண்ணை முட்டி முளைத்து மரமாக்கும் போது. மிருக குணங்களின் நடத்தைக்காய்…

இனிமையான வார்த்தைகள் இதயக் கீறல்களை இறக்க வைக்கும் போது. கடல் அலையின் சிதறல்கள் கருப்புப் பாறைகளை மண்ணாக்கும் போது. சூரியனின் ஒளி வீச்சுக்கள் மண்ணை முட்டி முளைத்து மரமாக்கும் போது. மிருக குணங்களின் நடத்தைக்காய்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *