மரணம்
- by admin
- 18
மரணம்
அதை நீ
மறந்தாலும் அது
உன்னை மறக்காது.
உரிய நேரத்தில்
உன்னை அடையும்
அது வரை தான்
இந்த
ஆட்டம் ஆராவாரம்
போட்டி பொறாமை
கூத்து குதர்க்கம்
துரோகம் வஞ்சகம்
இன்பம் துன்பம்
உறவு பிரிவு
எல்லாம்.
குனிந்து நிமிர்கையில்
நின்று போகும்
உன் மூச்சு.
கண்மூடி திறக்கும்
போது முடிந்து
போகும் உன் வாழ்க்கை.
நீர் குமிழி
உடையும் நொடியில்
பிரிந்து விடும்
உன் உயிர்.
அன்பையும்
அழகிய பண்பையும்
அடையாளமாய்
விட்டுச் செல்
அது மட்டுமே
அழியாமல் உன்
பெயர் சொல்லும்
அழியும் இவ்வுலகில்.
இதயத்துடிப்பு
நிற்கும் போது
உனக்காக துடிக்கும்
இதயங்கள் இங்கே
இது மரணம்!
Rushdha Faris
South Eastern University of Sri Lanka.
மரணம் அதை நீ மறந்தாலும் அது உன்னை மறக்காது. உரிய நேரத்தில் உன்னை அடையும் அது வரை தான் இந்த ஆட்டம் ஆராவாரம் போட்டி பொறாமை கூத்து குதர்க்கம் துரோகம் வஞ்சகம் இன்பம் துன்பம்…
மரணம் அதை நீ மறந்தாலும் அது உன்னை மறக்காது. உரிய நேரத்தில் உன்னை அடையும் அது வரை தான் இந்த ஆட்டம் ஆராவாரம் போட்டி பொறாமை கூத்து குதர்க்கம் துரோகம் வஞ்சகம் இன்பம் துன்பம்…