வீரத் தழும்புகளுடன் பதினாறு பூர்த்தி

  • 9

உயிர்களை காவு கொள்ள
உனக்கொர் ஊகம் வந்ததோ?
எம் உடன் பிறப்புக்களை கொன்று நீயும
உன் கோரப் பசியை தீர்த்து கொண்டாயோ?

காலம் அழியா பெயர் பெறவா?
நீ கண்ணீர் எமக்கு பரிசளித்தாய்?
உன் கோரப் புத்தி கொண்டு நீயும் – எம் உறக்கத்தை பறித்துக் கொண்டாய்!

அழியாத வீரன் என்று
பெயரெடுத்து நீயும் சென்றாய்
அழியாத பல வடுக்கள் கொண்டு – இவ்
உலகையே முடக்கி விட்டாய்!

உயிர்களை குடித்து
உடமைகளை அழித்து
உன் வீரத்தை போற்றிடவா
எம்மை வீதியில் விரட்டு விட்டாய்!

அற்புதமாய் உயிர் காவு கொண்டு
அடங்கி நீயும் அமைதியானாய்!
நீ சென்ற பின்னாலும் – உன்
வீரத்தழும்படிகள்
பதினாறு வருடங்களை
பூர்த்தியாய் புதிப்பித்தன!

உன் பசிக்காக – மனித உயிரை ருசியாக்கி
உன் கோபக் கனலை தீர்த்துக் கொண்டாய்!
இனி மேலும் வேண்டாமே
பொல்லாத இக் கோபம்!
தாங்காத வடுக்களை
தொடர்ந்து நாங்கள் ஏற்பதற்கு!

ShimÀ Hareeś
Puttalam Karambe

உயிர்களை காவு கொள்ள உனக்கொர் ஊகம் வந்ததோ? எம் உடன் பிறப்புக்களை கொன்று நீயும உன் கோரப் பசியை தீர்த்து கொண்டாயோ? காலம் அழியா பெயர் பெறவா? நீ கண்ணீர் எமக்கு பரிசளித்தாய்? உன்…

உயிர்களை காவு கொள்ள உனக்கொர் ஊகம் வந்ததோ? எம் உடன் பிறப்புக்களை கொன்று நீயும உன் கோரப் பசியை தீர்த்து கொண்டாயோ? காலம் அழியா பெயர் பெறவா? நீ கண்ணீர் எமக்கு பரிசளித்தாய்? உன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *