மாற்றம் தேடி

  • 13

வஞ்சகம் இல்லா
நெஞ்சகம் கொள்வோம்.
சஞ்சலம் தனைக் கொல்வோம்.

பேதமை அழித்து
ஏதம் தான் ஒழித்து
ஊதியம் செய்திட முயல்வோம்.

மிடிமையை ஒழித்திட
மடமையை கொழுத்திட
மதி வளர் வழியினில் செல்வோம்.

வேற்றுமை கலைத்து
ஒற்றுமை விதைத்து
நாற்றிசை வளம்பெற வாழ்வோம்

குவலயம் சிறக்க
குதூகலம் பிறக்க
அன்பினால் அனைத்தையும் வெல்வோம்

பிரிவினை நீக்கி
புரிதலைத் தேக்கி
புதியதோர் உலகினை ஆள்வோம்.

மக்கொனையூராள்

வஞ்சகம் இல்லா நெஞ்சகம் கொள்வோம். சஞ்சலம் தனைக் கொல்வோம். பேதமை அழித்து ஏதம் தான் ஒழித்து ஊதியம் செய்திட முயல்வோம். மிடிமையை ஒழித்திட மடமையை கொழுத்திட மதி வளர் வழியினில் செல்வோம். வேற்றுமை கலைத்து…

வஞ்சகம் இல்லா நெஞ்சகம் கொள்வோம். சஞ்சலம் தனைக் கொல்வோம். பேதமை அழித்து ஏதம் தான் ஒழித்து ஊதியம் செய்திட முயல்வோம். மிடிமையை ஒழித்திட மடமையை கொழுத்திட மதி வளர் வழியினில் செல்வோம். வேற்றுமை கலைத்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *