நிலையாமை
- by admin
- 7
அவனியில் இடர் கண்டு அஞ்சாதே
ஆத்திரப்படுவதால் எதுவும் எஞ்சாதே
இகபோகம் என்றும் நிலையில்லையே
ஈடேற்றம் பெறவே வாழ்ந்திடுவோமே
உகப்பிரளயம் ஒன்றுண்டு மறந்திடாதே
ஊழ்வினைப் பலன் எல்லாம் நிழலாடுமே
என்னுடையது என்றிட எதுவுமில்லை
ஏகன் அவன் காட்சியே ஒரே எல்லை
ஐம்புலனும் அன்று சாட்சியாகுமே
ஒருவன் அவன் வசம் ஆட்சியாகுமே
ஓரவாரம் இன்றிய தீர்ப்புக்களுக்காய்
ஔதாரியம் கொண்டே வாழ்ந்திடுவோமே
இஃது உணர்வோம் எல்லாம் நலமாகிடுமே.
மக்கொனையூராள்
அவனியில் இடர் கண்டு அஞ்சாதேஆத்திரப்படுவதால் எதுவும் எஞ்சாதேஇகபோகம் என்றும் நிலையில்லையேஈடேற்றம் பெறவே வாழ்ந்திடுவோமே உகப்பிரளயம் ஒன்றுண்டு மறந்திடாதேஊழ்வினைப் பலன் எல்லாம் நிழலாடுமேஎன்னுடையது என்றிட எதுவுமில்லைஏகன் அவன் காட்சியே ஒரே எல்லை ஐம்புலனும் அன்று சாட்சியாகுமேஒருவன்…
அவனியில் இடர் கண்டு அஞ்சாதேஆத்திரப்படுவதால் எதுவும் எஞ்சாதேஇகபோகம் என்றும் நிலையில்லையேஈடேற்றம் பெறவே வாழ்ந்திடுவோமே உகப்பிரளயம் ஒன்றுண்டு மறந்திடாதேஊழ்வினைப் பலன் எல்லாம் நிழலாடுமேஎன்னுடையது என்றிட எதுவுமில்லைஏகன் அவன் காட்சியே ஒரே எல்லை ஐம்புலனும் அன்று சாட்சியாகுமேஒருவன்…