வானம் கூட வசமாகும்

  • 9

மனிதா!
வானில் ஆயிரம், ஆயிரம் விண்மீன்கள்
புன்னகைப்பது உன்னை பார்த்து தான்
உனக்கு நல்வழி காட்டத்தான்.

பலநூறு முட்களின் நடுவே
பசுமையான ரோஜா மலரவில்லையா
சேற்றின் பகுதியில் செந்தாமரை
இதழ் விரிக்கவில்லையா?

மரக்கிளைகள் வெட்ட வெட்ட
தளர்ந்து வளரும் அதன் வேரினை வெட்டாதவரை
தடைகள் எல்லாம் முட்டுக்கட்டைகள் அல்ல
ஓர் இலட்சியவாதி ஏறும் படிக்கற்கள்

சில நரம்பில்லாத நாவுகள்
உன் மனதைக் கீறிடலாம் கலங்கிவிடாதே.
சோதனைகளைத் தாண்டாமல்
யாரும் சாதிப்பதில்லை

உன் துன்ப துயரங்களை மூட்டை கட்டிவிடு
இதற்காக நீ வாளை எடுத்துப்
போராட வேண்டியதில்லை
இறை நாட்டமும் உன் விடாமுயற்சியும்
இருந்தால் வானம் கூட வசமாகும்

Jàzira Junaideen
Medawachchiya.

மனிதா! வானில் ஆயிரம், ஆயிரம் விண்மீன்கள் புன்னகைப்பது உன்னை பார்த்து தான் உனக்கு நல்வழி காட்டத்தான். பலநூறு முட்களின் நடுவே பசுமையான ரோஜா மலரவில்லையா சேற்றின் பகுதியில் செந்தாமரை இதழ் விரிக்கவில்லையா? மரக்கிளைகள் வெட்ட…

மனிதா! வானில் ஆயிரம், ஆயிரம் விண்மீன்கள் புன்னகைப்பது உன்னை பார்த்து தான் உனக்கு நல்வழி காட்டத்தான். பலநூறு முட்களின் நடுவே பசுமையான ரோஜா மலரவில்லையா சேற்றின் பகுதியில் செந்தாமரை இதழ் விரிக்கவில்லையா? மரக்கிளைகள் வெட்ட…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *