முள்ளோடுதான் ரோஜா

  • 141

பெண்ணே! வரையறைகள் எல்லாம்
உன்னை பக்குவப்படுத்துவதற்கும், பத்திரப்படுத்துவதற்குமேயன்றி
அடிமைப்படுத்துவதற்கில்லை.

மனம் போன போக்கில்
வாழ்வதல்ல வாழ்க்கை
மானம் மாணப்பெரிதென
வாழ்வதே வாழ்க்கை.

வட்டத்துக்குள் வாழ்வதால் – நீ
கிணற்றுத்தவளையாகிட முடியாது
அந்த வட்டம் தான் உனை
பல வாட்டங்களில் இருந்து
காக்கும் காவலரண்.

நாணம் உனக்கு
வேலியாக வேண்டும்
நாணயம் உனக்கு
தோழியாக வேண்டும்.

இஷ்டப்படி வாழ்வதில் கிடைப்பது
இன்பங்கள் இல்லை.
இனியோர் சொல் கேட்டொழுகுதல்
இன்பத்தின் எல்லை.

எப்படியும் வாழலாம் என்றிருந்தால்
வாழ்க்கை முல்லை வனம்
ஆனால், இப்படித்தான் வாழ வேண்டுமென்றிருந்தால்
வாழ்க்கை முள் வனம்.

கலங்காதே
முள்ளுடன் உள்ள ரோஜாதான்
பன்னீராய் வாசம் வீசும்.

Farhana Abdullah
Maggona.
(மக்கொனையூராள்)

பெண்ணே! வரையறைகள் எல்லாம் உன்னை பக்குவப்படுத்துவதற்கும், பத்திரப்படுத்துவதற்குமேயன்றி அடிமைப்படுத்துவதற்கில்லை. மனம் போன போக்கில் வாழ்வதல்ல வாழ்க்கை மானம் மாணப்பெரிதென வாழ்வதே வாழ்க்கை. வட்டத்துக்குள் வாழ்வதால் – நீ கிணற்றுத்தவளையாகிட முடியாது அந்த வட்டம் தான்…

பெண்ணே! வரையறைகள் எல்லாம் உன்னை பக்குவப்படுத்துவதற்கும், பத்திரப்படுத்துவதற்குமேயன்றி அடிமைப்படுத்துவதற்கில்லை. மனம் போன போக்கில் வாழ்வதல்ல வாழ்க்கை மானம் மாணப்பெரிதென வாழ்வதே வாழ்க்கை. வட்டத்துக்குள் வாழ்வதால் – நீ கிணற்றுத்தவளையாகிட முடியாது அந்த வட்டம் தான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *