பெண் மாறினால்
- by admin
- 9
எண்ணம் கொண்டால்
எட்டாத் திசையும்
எள்ளளவுமின்றி
களைத்தெறிவாள் – பெண்
கறைகளால் கண் குளிர்ச்சி
காணும் – இந்த கானலுலகை
அன்பால் அரவணைக்கும்
அன்னை ஆயிஷா
அவளின் அழகிய முன்மாதிரி
உயிரன்றி என்னுணர்வன்றி
என்னிறைவன் போதுமானவன்
என்ற சுமையாவின் வழித்தோன்றளவள்
சிறப்பாக்கப்பட்டவள்
மகளாகும் போது
மனைவியாகும் போது
அன்னையாகும் போது
கவர்ச்சி என்று காட்சி காட்டும்
பெண்ணே மறந்து விடாதே
நிலைமாறிச் செல்லும்
இம் மாற்றம் தரும்
மார்க்கமல்ல நமது
உன்னால் மாற்றப்பட வேண்டும்
உனக்காக என்றிறாமல்
மொத்தமாய்
உன் பின்னால் சமூகத்திற்காய்
மறந்து விடாதே
உன்னுள்ளான மாற்றமன்றி
உன் மாற்றமன்றி
இங்கு மாறிவிடப்போவது
எதுவுமன்றி
Fathima Ishadha
எண்ணம் கொண்டால் எட்டாத் திசையும் எள்ளளவுமின்றி களைத்தெறிவாள் – பெண் கறைகளால் கண் குளிர்ச்சி காணும் – இந்த கானலுலகை அன்பால் அரவணைக்கும் அன்னை ஆயிஷா அவளின் அழகிய முன்மாதிரி உயிரன்றி என்னுணர்வன்றி என்னிறைவன்…
எண்ணம் கொண்டால் எட்டாத் திசையும் எள்ளளவுமின்றி களைத்தெறிவாள் – பெண் கறைகளால் கண் குளிர்ச்சி காணும் – இந்த கானலுலகை அன்பால் அரவணைக்கும் அன்னை ஆயிஷா அவளின் அழகிய முன்மாதிரி உயிரன்றி என்னுணர்வன்றி என்னிறைவன்…