மொட்டுக்களை சிதைக்காதே

  • 23

பறவைகளை சிறைப்பிடித்தால்
விடுதலை கிடைத்து விடும்
கனவுகளை சிறைப்பிடித்தால்
விடுதலை யார் தருவாரோ?

கட்டிலில் குழந்தை அழுதால்
கண்ணீரை தாய் துடைப்பாள்
கடலுக்குள் மீன் அழுதால்
கண்ணீரை யார் துடைப்பார்?

மலர்ந்த பூக்களை
விட்டு விட்டு
மலரக் காத்திருக்கும்
மொட்டுக்களை
சிதைப்பது ஏனோ?

உணவுகளை விட்டு விட்டு
உணர்வுகளால் பசி தீர்க்க
நினைப்பது ஏனோ!

வேண்டாம் மனிதா!
நிறுத்தி விடு!

மொட்டுக்கள் இராட்சத
மலராக மலர்ந்தால்
உன்னை சிதைக்கக்கூடும்!

Noor Shahidha
SEUSL
Badulla

பறவைகளை சிறைப்பிடித்தால் விடுதலை கிடைத்து விடும் கனவுகளை சிறைப்பிடித்தால் விடுதலை யார் தருவாரோ? கட்டிலில் குழந்தை அழுதால் கண்ணீரை தாய் துடைப்பாள் கடலுக்குள் மீன் அழுதால் கண்ணீரை யார் துடைப்பார்? மலர்ந்த பூக்களை விட்டு…

பறவைகளை சிறைப்பிடித்தால் விடுதலை கிடைத்து விடும் கனவுகளை சிறைப்பிடித்தால் விடுதலை யார் தருவாரோ? கட்டிலில் குழந்தை அழுதால் கண்ணீரை தாய் துடைப்பாள் கடலுக்குள் மீன் அழுதால் கண்ணீரை யார் துடைப்பார்? மலர்ந்த பூக்களை விட்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *