வக்பு சபை, உலமா சபையின்நோன்புப் பெருநாள் வழிகாட்டல்

  • 66

முஸ்லிம்கள் ஒரு மாதம் நோன்பு நோற்றுக் கொண்டாடும் ரமழான் பண்டிகை எதிர்வரும் வியாழக் கிழமை  (13) அல்லது வெள்ளிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில் ரமழான் பண்டிகை கொண்டாட்டம் மாத்திரம் வணக்கங்களை மேற்கொள்வதற்கான வழிகாட்டல்களை வக்பு சபை . உலமா சபை என்பன வௌியிட்டுள்ளன.

முஸ்லிம் பள்ளிவாயல்கள் மற்றும் அறக்கட்டளைகள் (வக்பு சபை) முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில்,

பள்ளிவாயல்களில் நோன்புப் பெருநாள் தொழுகை நடாத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகமாக பரவும் கொரோனா தொற்று நோய் மற்றும் வணக்கஸ்தளங்களில் கூட்டுச் செயற்பாடுகளை தவிர்க்குமாறு கூறும் சுகாதார வழிகாட்டல்களையும் கருத்திற் கொண்டு எதிர் வரும் ரமழான் பண்டிகை (ஈதுல் பித்ர் பெருநாள்) தொழுகைகைளை எந்தவொரு பள்ளிகளிலும் நடாத்தக் கூடாது என இலங்கை வக்பு சபை தீர்மானித்துள்ளது.

மேலும் குறித்த தினத்தில் சகல பள்ளிவாசல்களும் மூடப்பட்டிருத்தல் வேண்டும்.

வீட்டில் குடும்பத்தோடு வணக்கங்களில் (பெருநாள் தொழுகையை தொழுமாறு) ஈடுபடுமாறும் வெளியில் நடமாடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் முஸ்லிம்களிடம் கோரப்பட்டுள்ளது.

மேலும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை (நோன்புப் பெருநாள்) தொழுகை மற்றும் (குத்பா) உரை சம்பந்தமான வழிகாட்டல்களை வௌியிட்டுள்ளது.

நோன்புப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவது விருப்பத்திற்குரியது (ஸுன்னா முஅக்கதாவாகும்). சென்ற வருடத்தை விட இவ்வருடம் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் ஒவ்வொருவரும் தமது வீடுகளில் சென்ற வருடத்தை போன்று வீட்டில் உள்ளவர்களுடன் மாத்திரம் சேர்ந்து கூட்டாக இதனை நிறைவேற்றுவதே மார்க்க வழிகாட்டல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருநாள் தொழுகை:

1. பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவது விருப்பத்திற்குரியது (சுன்னத் முஅக்கதாவாகும்). இதனை தனியாக தொழுவதற்கு அனுமதியிருந்தாலும், கூட்டாக நிறைவேற்றுவதே சிறந்ததாகும்.

2. சூரியன் உதயமானதிலிருந்து உச்சத்தை அடையும் வரை பெருநாள் தொழுகையை நிறைவேற்ற முடியும். என்றாலும், சூரியன் உதயமாகி 15 நிமிடங்கள் கழிந்ததிலிருந்து (ஓர் ஈட்டிப் பிரமாணம் உயர்ந்ததிலிருந்து) தொழுது கொள்வது சிறந்ததாகும்.

3. பெருநாள் தொழுகைக்கென4 அதான், இகாமத் கிடையாது.

4. பெருநாளுடைய தொழுகை இரண்டு ரக்அத்களைக் கொண்ட தொழுகையாகும். சுன்னத்தான நோன்புப் பெருநாள் தொழுகையைத் தொழுவதாக நிய்யத் வைத்து, தக்பீர் கூறி கைகளைக் கட்டியதன் பின் வஜ்ஜஹ்த்து துஆவை ஓதுவது சுன்னத்தாகும். இது போன்று ஹதீஸில் வந்துள்ள வேறு துஆக்களையும் ஓதலாம்.

5. பின்னர், ஏழு தக்பீர்கள் கூறி ஒவ்வொரு தக்பீருக்கும் ஆரம்ப தக்பீர் போன்று கைகளை உயர்த்திக் கட்டுதல் வேண்டும். அவ்வாறே, இரண்டாவது ரக்அத்திலும் முதல் தக்பீர் (ஸுஜூதிலிருந்து நிலைக்கு வரும்) தவிர்த்து ஐந்து தக்பீர்கள் கூறி, கைகளைக் கட்டிக்கொள்ளுதல் வேண்டும். இரண்டு ரக்அத்துக்களிலும் ஒவ்வொரு தக்பீர்களுக்குமிடையில், سُبْحَانَ اللهِ، وَالْحْمدُ لِلّهِ، وَلَا إِلهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ போன்ற திக்ர்களை ஓதிக்கொள்ளலாம்.

6. இரண்டு ரக்அத்திலும் தக்பீர்கள் முடிந்ததன் பின் ஸூரத்துல் ஃபாத்திஹாவை ஓதுவது கட்டாயமாகும். பிறகு, ஏதாவது ஒரு ஸூராவை ஓதுவது சுன்னத்தாகும்.

7. முதலாவது ரக்அத்தில் ஸூரத்துல் அஃலாவையும் (سورى الأعلى) , இரண்டாவது ரக்அத்தில் ஸூரத்துல் ஙாஷியாவையும் (سورة الغاشية) மனனமுள்ளவர்கள் ஓதுவது சுன்னத்தாகும்.

8. ஒருவர் தனியாக தொழுகையை நிறைவேற்றினால் அவர் பெருநாள் தொழுகையான இரண்டு ரக்அத்துக்களை மாத்திரம் தொழுது கொள்வார்.

9. ஜமாஅத்தாக தொழும்போது ஆண்களே இமாமத் செய்தல் வேண்டும். பெண்கள் மாத்திரம் ஜமாஅத்தாக தொழும் நிலை ஏற்பட்டால், பெண்களில் ஒருவர் இமாமத் செய்ய முடியும். இச்சந்தர்ப்பத்தில் பெண்களுக்கு குத்பா இல்லை. பெண்களில் ஒருவர் சிறிய உபதேசம் ஒன்று செய்து கொள்ளலாம்.

பெருநாள் குத்பா:

10. இரண்டு நபர்கள் அல்லது அதைவிடக் கூடுதலானவர்கள் இருந்தால் குத்பாவை நிகழ்த்தலாம். ஜுமுஆவுக்குத் தேவையான எண்ணிக்கை அவசியமில்லை.

11. பெருநாள் தொழுகையின் பின், பெருநாளுடைய குத்பாவை நிகழ்த்துவது சுன்னத்தாகும். அது ஜுமுஆவுடைய குத்பாவைப் போன்று நிகழ்த்தப்படல் வேண்டும். என்றாலும், பெருநாளுடைய முதலாவது குத்பாவை ஒன்பது தக்பீர்களைக் கொண்டும், இரண்டாவது குத்பாவை ஏழு தக்பீர்களைக் கொண்டும் ஆரம்பித்தல் வேண்டும்.

12. ஜுமுஆவுடைய இரு குத்பாக்கள் போன்று பெருநாளுடைய குத்பாவையும் செய்தல் வேண்டும். இரு குத்பாக்களிலும் பின்வருவனவற்றை அறபியில் கூறுவது போதுமானது.

الْحْمدُ لِلّهِ

والصّلاَةُ والسّلاَمُ عَلَى مُحَمَّدٍ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

واتَّقُوا الله

மேலும், இரு குத்பாக்களில் ஏதாவது ஒன்றில் அல்-குர்ஆன் வசனம் ஒன்றை ஓதுதல். இரண்டாவது குத்பாவில் اللهُمَّ اغْفِرْ لِلمُؤمِنِيْنَ والمُؤْمِنَاتِ என்று கூறி முஃமின்களுக்காக துஆச் செய்து குத்பாவை நிறைவு செய்தல் வேண்டும். மாதிரி குத்பா இணைக்கப்பட்டுள்ளது.

13. குத்பாவை நிறைவு செய்ததன் பின் விரும்பினால் உபதேசம் ஒன்றை நிகழ்த்தலாம்.

14. மேற்குறித்த விடயங்களை ஓதி குத்பாவை நிகழ்த்தக் கூடியவர் யாரும் இல்லையெனில் தொழுகையுடன் போதுமாக்கிக்கொள்ள முடியும். ஏனெனில், பெருநாள் தொழுகை நிறைவேறுவதற்கு குத்பா அவசியமில்லை.

15. தற்கால அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பெருநாள் தொழுகை மற்றும் குத்பாவை வீட்டில் உள்ளவர்கள் மாத்திரம் ஒன்று சேர்ந்து நிறைவேற்றல் வேண்டும்.

மாதிரி பெருநாள் குத்பா

முதலாவது குத்பா :

اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ الْحَمْدُ لِلَّهِ وَالصًّلاَةُ وَالسَّلَامُ عَلَى مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ صَلّى الله عَلَيْهِ وَسَلًّمَ. أٌمّا بَعْدُ.

يَا أًيُّهَا النَّاسُ اتَّقُوا الله قَالَ الله تَعَالىَ أَعُوْذُ بِالله مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الأَبْتَرُ.

وقال النبي صلى الله عليه وسلم قال: ((الدِّين النَّصِيحَةُ))

أَسْتَغْفِرُ اللهَ لِيْ وَلَكُمْ فَاسْتَغْفِرُوْهُ إنَّهُ هُوَ الغَفُوْرُ الرَّحِيْمُ

இரண்டாவது குத்பா:

اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ الْحَمْدُ لِلَّهِ وَالصلاة والسَّلَامُ عَلَى مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. أمَّا بَعْدُ

يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا اللهَ قَالَ اللهُ تَعَالى أَعُوذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ

وَارْضَ اللّهُمَّ عَنِ الخُلَفَاءِ الأَرْبَعَةِ وَجَمِيْعِ الصَّحَابَةِ رَضِيَ اللهُ عَنْهُمْ أَجْمَعِيْنَ.

اللهُمَّ اغْفِرْ لِلمُؤمِنِيْنَ والمُؤْمِنَاتِ والمُسْلِمِينَ والمُسْلِمَاتِ

بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِيْنَ

அஷ்ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ் 
செயலாளர் – ஃபத்வாக் குழு 
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

மேலும் கடந்த  ஏப்ரல் சித்திரைப் புத்தாண்டு காலத்தில்  சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றாமை கொரோனா மூன்றாம் அலை ஏற்படக் காரணம் எனக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இப்னு அஸாத்

முஸ்லிம்கள் ஒரு மாதம் நோன்பு நோற்றுக் கொண்டாடும் ரமழான் பண்டிகை எதிர்வரும் வியாழக் கிழமை  (13) அல்லது வெள்ளிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் ரமழான் பண்டிகை கொண்டாட்டம் மாத்திரம் வணக்கங்களை மேற்கொள்வதற்கான வழிகாட்டல்களை வக்பு சபை…

முஸ்லிம்கள் ஒரு மாதம் நோன்பு நோற்றுக் கொண்டாடும் ரமழான் பண்டிகை எதிர்வரும் வியாழக் கிழமை  (13) அல்லது வெள்ளிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் ரமழான் பண்டிகை கொண்டாட்டம் மாத்திரம் வணக்கங்களை மேற்கொள்வதற்கான வழிகாட்டல்களை வக்பு சபை…