மீண்டும் வருவாயே ரமழான்

  • 14

அல்குர்ஆன் மணம் கமழ் வாசம்
ஈருலகும் மங்காப் புகழ் வீசும்
அழுது தொழுது கண்ணீரால் பேசும்
அழகிய ரமழான் விடைபெறுகிறாய் இத் தேசம்

பசியுடன் கழிந்தன பகற் பொழுதுகள்
வணக்கத்தில் கழிந்தன இராப் பொழுதுகள்
இதயத்தில் இல்லை வீண் பழுதுகள்
விதைத்தோம் மறுமைக்காய் நன்மை விழுதுகள்

ஸதகாவில் மனம் குளிர்ந்தோம்
ஸக்காத்தில் தூய்மை அடைந்தோம்
தவ்பாவால் உள்ளம் மீண்டோம்
தக்வாவுடன் வாழ்வைத் தொடர்வோம்

பண்ணிய பாவம் பறந்திடச் செய்தாயே
புண்ணியம் வாழ்வில் நிலைத்திட வைத்தாயே
கண்ணியம் ஆன்மாவில் கலந்திடச் செய்தாயே
ஈமானியம் விளைந்திட மீண்டும் வருவாயே

மக்கொனையூராள்

அல்குர்ஆன் மணம் கமழ் வாசம் ஈருலகும் மங்காப் புகழ் வீசும் அழுது தொழுது கண்ணீரால் பேசும் அழகிய ரமழான் விடைபெறுகிறாய் இத் தேசம் பசியுடன் கழிந்தன பகற் பொழுதுகள் வணக்கத்தில் கழிந்தன இராப் பொழுதுகள்…

அல்குர்ஆன் மணம் கமழ் வாசம் ஈருலகும் மங்காப் புகழ் வீசும் அழுது தொழுது கண்ணீரால் பேசும் அழகிய ரமழான் விடைபெறுகிறாய் இத் தேசம் பசியுடன் கழிந்தன பகற் பொழுதுகள் வணக்கத்தில் கழிந்தன இராப் பொழுதுகள்…