அன்பு எதனாலானது

  • 11

…..

அன்பு மெழுகாலானதா
ஆன்மா இப்படி உருகுகின்றதே
அன்பு பூக்களால் ஆனதா
ஒரு நேசத்தின் வருகையில் இதழ்விரிகிறதே

அன்பு காற்றால் ஆனதா
ஒரு தலை வருடலில் சோகம் தீர்க்கிறதே
அன்பு மழையால் ஆனதா
பாசத்துளிகளில் இதயம் குளிர்கிறதே

அன்பு தீயால் ஆனதா
ப்ரியம் பிரிகையில் சுடுகின்றதே
அன்பு மரங்களால் ஆனதா
ஆறுதல் வார்த்தைகள் நிழலாகின்றதே

அன்பு ஒளியால் ஆனதா
தனிமை இருள் கலைக்கின்றதே
அன்பு வானவில்லால் ஆனதா
நொடிப்பொழுது தரிசனமும் அழகாகின்றதே

அன்பு தேனால் ஆனாதா
முரண்பாடுகளுக்குப் பின்னும் இனிக்கின்றதே
அன்பு நஞ்சால் ஆனதா
சிறு மௌனமும் உயிர் வதைக்கின்றதே

அன்பு இரும்பால் ஆனதா
தாய்மை தன் வலியெல்லாம் பொறுக்கின்றதே
அன்பு கண்ணீரால் ஆனதா
ஒரு தாமதம் கன்னம் நனைக்கின்றதே

அன்பு தண்ணீரால் ஆனதா
காதல் மொழியினில் நாடிநரம்புகள் நனைகின்றதே
அன்பு பன்னீரால் ஆனதா
புன்னகைக்கும் நாழிகைகள் மணம் கமழ்கின்றதே

அன்பு எதனாலானது
தேடலில் நானும் தெரிந்து கொண்டேன்
என்னில் உன்னில் மண்ணில் விண்ணில்
காணும் யாவும் அன்பானால்

அகம் இங்கு சிரிக்கும்
இகம் இங்கு சிறக்கும்

மக்கொனையூராள்

….. அன்பு மெழுகாலானதா ஆன்மா இப்படி உருகுகின்றதே அன்பு பூக்களால் ஆனதா ஒரு நேசத்தின் வருகையில் இதழ்விரிகிறதே அன்பு காற்றால் ஆனதா ஒரு தலை வருடலில் சோகம் தீர்க்கிறதே அன்பு மழையால் ஆனதா பாசத்துளிகளில்…

….. அன்பு மெழுகாலானதா ஆன்மா இப்படி உருகுகின்றதே அன்பு பூக்களால் ஆனதா ஒரு நேசத்தின் வருகையில் இதழ்விரிகிறதே அன்பு காற்றால் ஆனதா ஒரு தலை வருடலில் சோகம் தீர்க்கிறதே அன்பு மழையால் ஆனதா பாசத்துளிகளில்…