தேர்தல் சட்ட மறுசீரமைப்புத் தொடர்பில் பொது மக்களின் முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் 19ஆம் திகதியுடன் நிறைவு

  • 15

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பான யோசனைகள், முன்மொழிவுகளை எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதிக்கு முன்னர் எழுத்துமூலம் அனுப்பிவைக்குமாறு பாராளுமன்ற விசேட குழு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய இக் குழுவின் யோசனைகளை முன்வைப்பதற்கு எதிர்பார்க்கும் பொது மக்கள் மற்றும் ஏனைய ஆர்வமுள்ள அமைப்புக்கள் தமது முன்மொழிவுகளை தபால் மூலம் அல்லது sec.pscelectionreforms2021@parliament.lk என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாக அனுப்பிவைக்க முடியும் என இந்த விசேட பாராளுமன்ற குழுவின் செயலாளரும் பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

முன்மொழிவுகள் மற்றும் யோசனைகளை அனுப்பிவைக்க விரும்புவோர் செயலாளர், பாராளுமன்ற விசேட குழு, இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பான யோசனைகள், முன்மொழிவுகளை எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதிக்கு முன்னர் எழுத்துமூலம் அனுப்பிவைக்குமாறு பாராளுமன்ற விசேட குழு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.…

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பான யோசனைகள், முன்மொழிவுகளை எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதிக்கு முன்னர் எழுத்துமூலம் அனுப்பிவைக்குமாறு பாராளுமன்ற விசேட குழு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.…