பதவி விலகமாட்டேன் – அதுரலிய ரதன தேரர்

  • 25

தான் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யி­லி­ருந்தும் விலகிக் கொள்­வ­தற்குத் தயா­ராக இல்லை என அபே ஜன­பல கட்­சியின் தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அது­ர­லியே ரதன தேரர் தெரி­வித்­துள்ளார். சிங்­கள ஊட­க­மொன்­றுக்கு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறி­யுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்து வெளி­யி­டு­கையில்,

‘நான் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை இரா­ஜி­னாமா செய்­ய­வுள்­ள­தாக வெளி­வந்­துள்ள செய்தியில் எவ்வித உண்மையுமில்லை. அது பொய்யான செய்தியாகும். பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் 6 மாத காலத்தில் விலகுவதாக நான் எவருடனும் உடன்படிக்கை செய்துகொள்ளவில்லை. தொடர்ந்தும் எனது முழுமையான பதவிக் காலத்தை வகிப்பேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை அபே ஜன­பல கட்சி தனது தேசிய பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக நிய­மிக்க தீர்­மா­னித்­துள்­ளதாக கட்­சியின் தலைவர் சமன் பெரேரா ஏற்கனவே தெரி­வித்­திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்­து­ர­லியே ரதன தேரர் தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியில் ஆறு­மாத காலத்தை ஜூலை மாதம் 5ஆம் திகதி நிறைவு செய்­கிறார். அத­னை­ய­டுத்து அவர் தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­ததும் ஞான­சார தேரர் தேசி­ய­பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக நிய­மனம் பெறுவார் என பொது­பல சேனா அமைப்பின் ஊடக இணைப்­பாளர் எரந்த கேந­வ­ரத்ன இவ்வாரம் தெரி­வித்தார்.

தான் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யி­லி­ருந்தும் விலகிக் கொள்­வ­தற்குத் தயா­ராக இல்லை என அபே ஜன­பல கட்­சியின் தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அது­ர­லியே ரதன தேரர் தெரி­வித்­துள்ளார். சிங்­கள ஊட­க­மொன்­றுக்கு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர்…

தான் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யி­லி­ருந்தும் விலகிக் கொள்­வ­தற்குத் தயா­ராக இல்லை என அபே ஜன­பல கட்­சியின் தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அது­ர­லியே ரதன தேரர் தெரி­வித்­துள்ளார். சிங்­கள ஊட­க­மொன்­றுக்கு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர்…