அமைச்சரவை கூட்டத்தில் எரிபொருள் விலை தொடர்பாக விவாதிக்கவில்லை

  • 10

எரிபொருள் விலை தொடர்பாக நேற்று முன்தினம் (14.06.2021) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகள் 2021.06.14

நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் நேற்று முன்தினம் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். மேலும் தற்போதைய சூழ்நிலையில், நாட்டின் முழு பொருளாதாரத்தை மீட்டெடுக்க மிகவும் கடினமான முடிவுகள் கூட எடுக்கப்பட வேண்டி ஏற்படும் என்றும் கூறினார்.

அதன்படி எரிபொருள் விலை உயர்வு என்பது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை கருத்திற்கொண்டு எடுக்கப்பட்ட ஒரு முடிவு என்றும் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

எனவே, மக்களின் நலன்களுக்காக இல்லாத சில கடினமான முடிவுகளை எடுக்க நேரிடும் என்றும் இது ஒரு கடினமான முடிவாக தான் கருதுவதாகவும் கெஹலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் விலை தொடர்பாக நேற்று முன்தினம் (14.06.2021) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகள் 2021.06.14 நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே வெகுஜன ஊடக…

எரிபொருள் விலை தொடர்பாக நேற்று முன்தினம் (14.06.2021) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகள் 2021.06.14 நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே வெகுஜன ஊடக…