நஷ்டமான நிறுவனங்களை இலாபகரமாக மாற்றுவதற்கு சிறந்த எடுத்துக்காட்டு லங்கா பொஸ்பேற் நிறுவனம்

  • 9
கை நலுவிச் சென்ற லங்கா பொஸ்பேற் நிறுவனம் பற்றி அமைச்சர் விமல் வீரவன்ச

எதிர்காலத்தில் கூட, நஷ்டத்தை ஈட்டும் நிறுவனங்களை எவ்வாறு இலாபகரமான நிறுவனங்களாக மாற்றுவது என்பதற்கு லங்கா பொஸ்பேற் நிறுவனம் சிறந்த எடுத்துக்காட்டு என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது முகநூல் பதிவில்,

பல ஆண்டுகளாக நஷ்டத்தை ஏற்படுத்தி வந்த லங்கா பொஸ்பேற், 2015 நல்லாட்சி அரசாங்கத்தின் போது அதன் மிகப்பெரிய இழப்பை பதிவு செய்து, மொத்தம் ரூ .80.8 மில்லியன் நஷ்டத்தை பதிவு செய்துள்ளது.

அன்றிலிருந்து இழப்புக்களைச் சந்தித்து வரும் லங்கா பொஸ்பேற், 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து 2021 ஜூன் வரை எனக்கு கீழ் இருந்த புதிய தொழில்துறை அமைச்சரின் கீழ் ரூ .104.6 மில்லியனுக்கும் அதிகமான இலாபத்தைப் ஈட்டியுள்ளது.

எதிர்காலத்தில் கூட, நஷ்டத்தை ஈட்டும் நிறுவனங்களை எவ்வாறு இலாபகரமான நிறுவனங்களாக மாற்றுவது என்பதற்கு லங்கா பொஸ்பேற் நிறுவனத்தின் மீள் எழுச்சி சிறந்த எடுத்துக்காட்டு என்று தெரிவித்துள்ளார்.

நேற்று (18.06.2021) வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானிக்கு அமைய விமல் வீரவன்சவின் கைத்தொழில் அமைச்சின் கீழிருந்த, வரையறுக்கப்பட்ட லங்கா பொஸ்பேற் நிறுவனம் மஹிந்தானந்த அலுத்கமகே இனது விவசாய அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. LNN Staff

கை நலுவிச் சென்ற லங்கா பொஸ்பேற் நிறுவனம் பற்றி அமைச்சர் விமல் வீரவன்ச எதிர்காலத்தில் கூட, நஷ்டத்தை ஈட்டும் நிறுவனங்களை எவ்வாறு இலாபகரமான நிறுவனங்களாக மாற்றுவது என்பதற்கு லங்கா பொஸ்பேற் நிறுவனம் சிறந்த எடுத்துக்காட்டு…

கை நலுவிச் சென்ற லங்கா பொஸ்பேற் நிறுவனம் பற்றி அமைச்சர் விமல் வீரவன்ச எதிர்காலத்தில் கூட, நஷ்டத்தை ஈட்டும் நிறுவனங்களை எவ்வாறு இலாபகரமான நிறுவனங்களாக மாற்றுவது என்பதற்கு லங்கா பொஸ்பேற் நிறுவனம் சிறந்த எடுத்துக்காட்டு…