முகம்மது நபிக்கு அபகீர்த்தி – அரசியல் சூழ்ச்சி – ஜெயசிறில்

  • 13

நடவடிக்கை எடுக்க முறைப்பாடு இல்லாவிடின் போராட்டம்

உலக முஸ்லிங்களின் தலைவராக உள்ள இறைத்தூதுவரும் முஸ்லிங்கள் தமது உயிரைவிட மேலாக மதிக்கும் முஹம்மது நபியை தகாத வார்த்தைகளை கொண்டு திட்டி முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ள காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என அம்பாறை மாவட்ட பொது அமைப்புக்களின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

தெய்வம் தந்த வரத்தை பூசாரி தடுப்பது ஏன் இன்று ஜூம்ஆ வில் மக்கள் தடுக்கப்பட்டது

இன்று (30.07.2021) சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து இவ்வேண்டுகோளை முன்வைத்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த அவர்கள்,

உலக முஸ்லிங்களின் தலைவராக உள்ள இறைத்தூதுவரும் முஸ்லிங்கள் தமது உயிரைவிட மேலாக மதிக்கும் முஹம்மது நபியை தகாத வார்த்தைகளை கொண்டு திட்டி முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றினை காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் என்பவர் பகிர்ந்துள்ளார்.

அண்மைக்காலமாக இவர் இனங்களுக்கிடையே குழுப்பத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் பரவலாக மேற்கொண்டுள்ளதை காண முடிகின்றது. இவ்வாறு தான் உலக முஸ்லிங்களின் தலைவராக உள்ள இறைத்தூதரான எமது முஹம்மது நபியை தகாத வார்த்தைகளை கொண்டு திட்டி பதியவிட்டுள்ளனர். இதனால் எமது நாட்டின் சமாதானம் சீரழிவும் மிகப்பெரிய இனக்கலவரம் உருவாகவும் வாய்ப்பிருக்கிறது. எனவே இவரை கைது செய்து நாட்டின் இறையாண்மையை பாதுகாக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

சிங்கள தமிழ் முஸ்லிம் கிறிஸ்தவ மக்கள் ஒற்றுமையாக செறிந்து வாழும் இந்தநாட்டில் இனக்கலவரம் ஒன்றை உருவாக்க எத்தனித்திருக்கும் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் என்பவரை நாட்டை சீரழிக்க முனைந்த குற்றத்திற்காக கைது செய்து இலங்கை குடியரசின் சட்டத்தின் படி உயர்ந்த தண்டனையை பெற்றுக்கொடுக்க பொலிஸாரும், அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

மேலும் இன்று மாலை குறித்த முக நூல் பதிவு தொடர்பில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ.எல்.என். ஹுதா , சமூக மேம்பாட்டுக்கான நல்லிணக்க பேரவை தலைவர் எம்.எச்.எம். இப்ராஹிம் ,கல்முனை நல்லிணக்க அமைப்பின் தலைவர் ஏ.சி.எம். கலீலுர் ரஹ்மான் ,உள்ளிட்ட அம்பாறை மாவட்ட பொது அமைப்புக்களின் தலைவர்கள் மேற்கொண்டிருந்தனர்.

என்னை இனவாதியாக சித்தரிக்க மேற்கொள்ளப்பட்ட அரசியல் சூழ்ச்சி – ஜெயசிறில்

மேற்குறித்த  குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை விளக்கம் அளிக்கையில் என்னை இனவாதியாக சித்தரிக்க மேற்கொள்ளப்பட்ட அரசியல் சூழ்ச்சி என்று குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

என்னை இனவாதியாக சித்தரித்து அரசியலிலிருந்து ஓரங்கட்ட மேற்கொள்ளப்பட்ட அரசியல் சூழ்ச்சியே இது. எனக்கும் நபிகள்நாயகம் பற்றிய பதிவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. குறித்த ஊடகமாநாடு (30)பிற்பகல் காரைதீவு பிரதேசசபை தவிசாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கண்மணி நபிகள்நாயகம் அவர்கள் ஓர் உன்னதமான அற்புதமான இறைதுதாதர். அவரை அவமதித்ததாக என்னைத்தொடர்புபடுத்தி முகநூலில் சில பிரகிருதிகள் படுகேவலமாக விமர்சித்துவருகின்றனர்.

போலி முகநூல் பதிவை எனதுபெயரில் பதிவிட்டு தூற்ற ஆரம்பித்துள்ளனர். அதையிட்டு கவலைப்படவில்லை. ஆனால் இறைதூதரின் பெயரைப்பயன்படுத்தி தூற்றுவதையிட்டே கவலையடைகிறேன்.

வெறும் அரசியலுக்காக அந்தமாமனிதரை கொச்சைப்படுத்தவேண்டாம். எந்த மதமானாலும் எந்த இறைவனானாலும் பொதுவெளியில் இவ்வாறு அவமானப்படுத்தப்படக்கூடாது.

தாயின் காலடியில் சுவர்க்கத்தைக்காணலாம் என்றார் அவர். அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வம் என்கிறோம் நாம். தாயின் மகத்துவத்தை அனைத்தசமயங்களும் உயர்நிலையிலேயே வைத்துபோற்றுகின்றன. அதுபோல சகல சமயங்களும் போதனைகளும் மனிதர்களை புனிதனாக்கவே நல்வழிப்படுத்துவதற்காகவே தோற்றம்பெற்றன.

சுவாமிவிபுலாநந்தர் பிறந்தமண்ணில் பிறந்த நாங்கள் என்றும் ஏனையமதங்களை மதித்துநடப்பவர்கள். மனிதத்தை போற்றுபவர்கள். இனஜக்கியத்துடன் செயற்படுபவர்கள்.

இன மதம் கடந்து சேவையாற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம்வகிப்பவன் நான். இரு இனங்களுக்கும் தலைவனாக இருக்கின்ற நான் இறைதூதரைப்பற்றி விமர்சிப்பேனா? சாதாரண சிறுகுழந்தைக்கும் இது விளங்கும்.

வௌியேற விரும்புபவர்கள் – அமைச்சுப் பதவிகளுக்காக காத்திருப்பதில்லை – சனத் நிஷாந்

எனவே தயவுசெய்து யாரும் அரசியலுக்காக தெய்வங்களை இழுத்து விமர்சிப்பதை நிறுத்துங்கள். எங்களை என்னவேணுமென்றாலும் ஏசுங்கள், தூற்றுங்கள். ஆனால் இறைதூதரை இறைவனை கொச்சைப்படுத்தவேண்டாம். LNN Staff

நடவடிக்கை எடுக்க முறைப்பாடு இல்லாவிடின் போராட்டம் உலக முஸ்லிங்களின் தலைவராக உள்ள இறைத்தூதுவரும் முஸ்லிங்கள் தமது உயிரைவிட மேலாக மதிக்கும் முஹம்மது நபியை தகாத வார்த்தைகளை கொண்டு திட்டி முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ள…

நடவடிக்கை எடுக்க முறைப்பாடு இல்லாவிடின் போராட்டம் உலக முஸ்லிங்களின் தலைவராக உள்ள இறைத்தூதுவரும் முஸ்லிங்கள் தமது உயிரைவிட மேலாக மதிக்கும் முஹம்மது நபியை தகாத வார்த்தைகளை கொண்டு திட்டி முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ள…