வரமானவர்கள்
- by admin
- 14
வரண்டிருந்த பூமியும்
களிமண்ணாகியது
கடும் மழையின் தாக்கத்தில்
கடல்களும் கரை தாண்டவே!
பாலை வன பூமியும்
பசுப்பாலாகியது
பசுங்கன்று ஓடிவந்து
தாய் முகம் பார்க்கையிலே!
வாடிக் கிடந்த விதையொன்று
விருட்சமாய் மாறியது.
வித்திட்டவன் சலிக்காமல்
விடியலில் நீரூற்றையிலே!
சளைக்காது பயணத்தில்
சரித்திரமாய் தடம் பதிக்க
ஊக்கம் கொடுக்கும்
உரிமையாளன் ஒவ்வொருவர்
வாழ்விலும் வரமானவர்களே!
நீ ஊக்கம் கொடுக்கும்
உரிமையாளன் இல்லையெனின்
உறிஞ்செடுக்கும் உரமற்றவனாய்
இருந்து விடாதே!
தட்டி விடுவதைக் காட்டிலும்
தைரியம் ஊட்டுதல்
சிறந்ததே!
Shima Harees
University of Peradheniya
வரண்டிருந்த பூமியும் களிமண்ணாகியது கடும் மழையின் தாக்கத்தில் கடல்களும் கரை தாண்டவே! பாலை வன பூமியும் பசுப்பாலாகியது பசுங்கன்று ஓடிவந்து தாய் முகம் பார்க்கையிலே! வாடிக் கிடந்த விதையொன்று விருட்சமாய் மாறியது. வித்திட்டவன் சலிக்காமல்…
வரண்டிருந்த பூமியும் களிமண்ணாகியது கடும் மழையின் தாக்கத்தில் கடல்களும் கரை தாண்டவே! பாலை வன பூமியும் பசுப்பாலாகியது பசுங்கன்று ஓடிவந்து தாய் முகம் பார்க்கையிலே! வாடிக் கிடந்த விதையொன்று விருட்சமாய் மாறியது. வித்திட்டவன் சலிக்காமல்…