பள்ளிவாசல்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் – 2021.08.16
- by admin
- 15
கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வௌியிட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள் இன்று (18.06.2021) வெளியிட்டுள்ளது.
அதற்கமைய பள்ளிவாயல்களில் தனிமையாக தொழுவதற்கு மாத்திரம் எந்த நேரத்திலும் அதிகபட்சம் 35 நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
ஐவேளை ஜமாஅத் தொழுகை, ஜும்ஆ தொழுகை, ஜனாஸா தொழுகை, அல்.குர்ஆன், நிகாஹ் மஜ்லிஸ்கள் மற்றும் பள்ளிவாசல்களில் நடைபெறும் அனைத்து கூட்டு. செயற்பாடுகளையும் மறு அறிவித்தல் வரை நிறுத்தல் வேண்டும்.
ஏனைய அனைத்து சுகாதாரபாதுகாப்பு தரப்பினரின் விதிமுறைகள் மற்றும் வக்ப் சபையின் முன்னைய வழிகாட்டுதல்கள் மிகவும் கண்டிப்பாக பின்பற்றப்படல் வேண்டும்.
அதனடிப்படையில் முகக்கவசம் அணிதல், ஒரு மீட்டர் இடைவெளி பேணுதல், சொந்த தொழுகை விரிப்பை எடுத்துச் செல்லல் மற்றும் வீட்டிலிருந்து வுழு செய்து கொண்டு செல்வது போன்றன கட்டாயமாகும்.
பள்ளிவாயல்களில் வுழூ செய்யும் பகுதிகள் மற்றும் கழிப்பறைகள் மூடப்படல். வேண்டும்.
தனிமைப்படுத்தப்பட்டதாக / முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிவாயல்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருத்தல் வேண்டும்.
மேற்கூறிய அறிவுறுத்தல்களை கண்டிப்பாக கடைப்பிடிப்பது சாத்தியமற்றது! இயலாதது எனக் கருதினால், பள்ளிவாயல்களை முற்றாக மூடி வைத்திருக்க பள்ளிவாயல். நம்பிக்கையாளர்கள்! பொறுப்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வௌியிட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகள் இன்று (18.06.2021) வெளியிட்டுள்ளது. அதற்கமைய பள்ளிவாயல்களில் தனிமையாக தொழுவதற்கு மாத்திரம் எந்த நேரத்திலும்…
கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வௌியிட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகள் இன்று (18.06.2021) வெளியிட்டுள்ளது. அதற்கமைய பள்ளிவாயல்களில் தனிமையாக தொழுவதற்கு மாத்திரம் எந்த நேரத்திலும்…