சிறு நீரக மாற்றுச் சிகிச்சைக்கான உதவி கோரல்

  • 7

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ.

எனது சகோதரர் ஏ.கே. அஷ்ரப். இவருக்கு தற்போது 26 வயது. இவர் அல் ஹாமியா அரபுக்கல்லூரியில் ஷரீஆ கற்கை நெறியை பூர்த்தி செய்து மௌலவி பட்டம் பெற்றார். பின்னர் IT யில் CERTIFICATE COARSE, ENGLISH இல் NVQ LEVEL- 04 , COUNSELLING DIPLOMA – 02 வருடம், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2021-04-10ஆம் திகதி பட்டம் பெற்றமை என தனது வாழ்வினை கல்வியைக் கற்றுக் கொள்வதில் செலவழித்தார்.

அத்துடன் தற்போது திருமணமாகி வட மத்திய மாகாண ஆசிரியர் சேவைக்கு விண்ணப்பம் கோரப்பட்ட நிலையில் அதன் ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். திடீரென்று எதிர்பாராத விதமாக சிறுநீரக நோய் உள்ளது என்று அறியப்பட்டுள்ளது. அவரது இரு சிறுநீரகங்களும் செயலிழந்துள்ளதாக அனுராதபுர போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவித்துள்ளதுடன் அவருக்கு அவசரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

எனவே வைத்தியர்களின் வேண்டுகோளுக்கிணங்க உடனடியாக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருப்பதால் தங்களிடமிருந்து முடியுமான உதவி ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கிறேன்.

உதவ முன்வருபவர்கள் கீழ் வரும் ACCOUNT NUMBER க்கு முடியுமான தொகையை அனுப்பி வைக்கவும்.

85767687
ACA.Raheem
Boc
Horowpothana

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் இவரது ஆறு சகோதரர்களில் இரண்டாவது சகோதரராவார். இவர் உட்பட இவரது சகோதரர்கள் அனைவரும் மெளலவிமார்கள். அவர்களில் மூவர் ஹாபிழ்களுமாவர். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு சுமார் 45 லட்சம் ரூபாய் தேவைப்படுவதால் அவற்றை எம்மால் ஈடு செய்ய முடியாமல் உள்ளது. இவரின் தந்தை ஒரு சாதாரண விவசாயி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகையால் முடிந்தளவு எனது சகோதரருக்கு உதவிக் கரம் நீட்டுங்கள். நிச்சயமாக நாம் (குடும்பத்தினர்) அனைவரும் உங்களுக்காக துஆ செய்வோம்.

நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்:

“ஒரு மனிதன் தனது சகோதரருக்கு உதவி செய்யும் காலமெல்லாம் அல்லாஹ் அந்த மனிதனுக்கு (உதவி செய்த ) உதவி செய்கிறான்”.

மேலும் யார் ஒருவர் இவ்வுலகில் தனது பிற சகோதரரின் கஷ்டத்தைப் போக்குகின்றாரோ மறுமையில் அல்லாஹ் அவரின் ( கஷ்டத்தில் பங்கெடுத்தவரின்) கஷ்டத்தைப் போக்குகின்றான் என நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்.

இவ்வாறு இஸ்லாம் கஷ்டமான சந்தர்ப்பத்தில் மனிதன் செய்ய வேண்டிய விடயங்களையும் அதன் சிறப்புக்களையும் எடுத்துரைக்கின்றது.

எனவே COVID – 19 கொரோனா வைரஸ் நாடாளவிய மற்றும் உலகளாவிய ரீதியில் வியாபித்து உயிர்ச்சேதம், பொருளாதார நெருக்கடி என்பவற்றை ஏற்படுத்தியிருக்கின்ற இந் நிலையில் ( ஸதகா ) தர்மங்களை அதிகப்படுத்தி அல்லாஹ்வின்நெறுக்கத்தைப் பெருவோமாக.

நீங்கள் எனது சகோதரருக்கு வைப்பிலிடும் சிறுதொகை அல்லது பெருந்தொகை பணம் நிச்சயம் அவரது உயிருக்கு உதவுவதாக அமையும். அத்துடன் நீங்கள் எனது சகோதரருக்கு வைப்பிலிடும் பணம் அமானிதமாக பேணிப்பாதுகாக்கப்பட்டு உரிய முறையில் செலவழிக்கப்படும்.

[pdfjs-viewer url=”https%3A%2F%2Fyouthceylon.com%2Fwp-content%2Fuploads%2F2021%2F08%2FCamScanner-09-02-2021-11.40.pdf” viewer_width=100% viewer_height=800px fullscreen=true download=true print=true]

தகவல்:
A.K. மிஹ்ழார்

A.K. அஷ்ரப் அவர்களின் மூத்த சகோதரன்.

மேலதிக தொடர்புகளுக்கு..
A.K. மிஹ்ழார்
0769456155 – MOBILE PHONE NUMBER, WHATSAPP NUMBER

EMAIL ADDRESS :
mihlarhami@gmail.com

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ. எனது சகோதரர் ஏ.கே. அஷ்ரப். இவருக்கு தற்போது 26 வயது. இவர் அல் ஹாமியா அரபுக்கல்லூரியில் ஷரீஆ கற்கை நெறியை பூர்த்தி செய்து மௌலவி பட்டம் பெற்றார். பின்னர்…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ. எனது சகோதரர் ஏ.கே. அஷ்ரப். இவருக்கு தற்போது 26 வயது. இவர் அல் ஹாமியா அரபுக்கல்லூரியில் ஷரீஆ கற்கை நெறியை பூர்த்தி செய்து மௌலவி பட்டம் பெற்றார். பின்னர்…