கொடபிடிய இளைஞர் யுவதிகளுக்கான தடுப்பூசி வழங்கும் செயற்பாடு
- by admin
- 8
அதுரலிய பிரதேச சபைக்கு உட்பட்ட 20 – 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதுரலிய பிரதேச சபை உறுப்பினர் சமீம் இக்பால் தெரிவித்தார்.
குறித்த தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இராணுவத்தினரின் பங்களிப்புடன் கொடபிடிய ஸாதாத் மகா வித்தியாலயத்தில் 09.09.2021 ஆம் திகதி (வியாழக்கிழமை) காலை 8;00 மணி முதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அதுரலிய பிரதேச சபைக்கு உட்பட்ட 28 கிராம சேவகப் பிரிவிற்கு உட்பட்ட 20 – 30 வயதுக்கு உட்பட்ட சுமார் 5,060 இளைஞர் யுவதிகள் உள்ளதாக தெரிவித்தார். என்றாலும் 3036 தடுப்பூசிகளே ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே வரையறுக்கப்பட்டுள்ள அளவில் தடுப்பூசி உள்ளதால், தடுப்பூசி பெற்றுக் கொள்ள வேண்டிய இளைஞர் யுவதிகள் தமக்கான தடுப்பூசிகளை காலை நேரத்திலே வந்து பெற்றுக் கொள்ளுமாறு குறிப்பிட்டார்.
அன்றைய தினம் பைஸர் வகை தடுப்பூசி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதுரலிய பிரதேச சபைக்கு உட்பட்ட 20 – 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதுரலிய பிரதேச சபை உறுப்பினர் சமீம் இக்பால் தெரிவித்தார். குறித்த தடுப்பூசி வழங்கும்…
அதுரலிய பிரதேச சபைக்கு உட்பட்ட 20 – 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதுரலிய பிரதேச சபை உறுப்பினர் சமீம் இக்பால் தெரிவித்தார். குறித்த தடுப்பூசி வழங்கும்…