வாழ்வோமா நாம்?

  • 23

கோரம் இந்தக் கொரோனா
அகோரம் அதன் விளைவுகள்!
கொத்துக் கொத்தாக கொன்று
உயிர் பறித்து ஏப்பமிடும்
பொல்லாத கொடுங் கோலன்!

உயிரைக் குடிக்கும் பேய்
உறவைப் பறிக்கும் எமன்
உணர்வுகளைச் சிதைக்கும் வடு
உள்ளத்தைத் தாக்கும் ஆயுதம்!
உலகை உலுக்கும் உலை!

கண்களைக் குருடாக்கி
காதுகளையும் செவிடாக்கி
கால்களையும் கட்டிப்போட்டு
கைகளையும் முடமாக்கி
கைவரிசையை காட்டுகிறதே!

தடிமன் இருமலெனத் தொடங்கி
தலைவலி காய்ச்சலென விரிந்து
உடல் வலியென வளர்ந்து
தருகிறதே தாங்கொனா வேதனை
ஏனெதற்கு இந்த சோதனை!

உடம்பி னுள்ளே நுழைந்து
பசியைத் திசை திருப்பி
மணநுகர்ச்சிகளையும் அழித்து
மாயாஜாலம் செய்யும் கிருமி
சுவாசத்தை நாசம் செய்கிறதே!

மக்களுக்கு அச்சமூட்டும் காணொளிகள்
மாக்களுக்கு எச்சரிக்கை போலே
எல்லாமே நிரம்பி வழிகிறது
வாழ்வின் தாற்பரியங்கள் அனேகம்
எல்லாமே புரியாத புதிராகவே!

உயிர் கொல்லிக் கொரோனா
வந்த இடம் மறந்தேபோனது!
வந்த காரணம் புரிகிறதா
நாட்டு பிரஜைகளின் மரணம்!
நாட்டு நிலமையோ மிகவவலம்

விலைவாசியோ பெருக்கலில்
உற்பத்தியோ பிரித்தலில்
நாடு பின்னோக்கி நடக்க
காடு கல்விக் கூடங்கள்
அழிவின் விளிம்பில் நாம்!

ஏற்றமுமில்லை இறக்கமுமில்லை
பொருளாதாரமும் கூடவுறக்கமே
எம்மக்கள் மத்தியிலோ பீதி
வாழ்வோமா நாமெனும் கேள்வி!
என்றும் வாட்டிவதைக்கும் சேதி!!

கவியரசி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா
பஸ்யால

கோரம் இந்தக் கொரோனா அகோரம் அதன் விளைவுகள்! கொத்துக் கொத்தாக கொன்று உயிர் பறித்து ஏப்பமிடும் பொல்லாத கொடுங் கோலன்! உயிரைக் குடிக்கும் பேய் உறவைப் பறிக்கும் எமன் உணர்வுகளைச் சிதைக்கும் வடு உள்ளத்தைத்…

கோரம் இந்தக் கொரோனா அகோரம் அதன் விளைவுகள்! கொத்துக் கொத்தாக கொன்று உயிர் பறித்து ஏப்பமிடும் பொல்லாத கொடுங் கோலன்! உயிரைக் குடிக்கும் பேய் உறவைப் பறிக்கும் எமன் உணர்வுகளைச் சிதைக்கும் வடு உள்ளத்தைத்…