வாழ்த்து மழை பொழிகிறேன்!

  • 19

கல்விக் கூடத்தில் மாணவர்
கல்விக் கல்லூரியில் பயிலுனர்
காலங்கள் பல காத்திருந்து
கல்லானாலும் கணவன் என
கண்ணென எம்.ஏ. முஹம்மது றிப்தியை
கணவனெனப் பெற்றேன் நானும்!

கடவுள் அமைத்துத் தந்தவர்
காதலெனும் அன்பு பொழிந்தவர்
கணவனென அன்பு கொண்டவர்
கல்விக் கடமையில் கைகோர்த்து
கண்ணியம் தான் காத்து
கடமைகள் பல நிறைவேற்றி
காதல் விளக்கேற்றியவர்!
உயிருக்குள் உயிரானவர்!
உறவுக்குள் உறவானவர்!
உண்மையின் ஒளியானவர்!

ஆங்கில அறிவை அள்ளி
மாணவர்களுக்கு வழங்கும் ஆசிரியராக
நற்பண்புகளை போதிக்கும் போதகராக
ஆசிரியர்களுக்கு ஆலோசனை கூறும்
ஆங்கில ஆசிரிய ஆலோசகராக
ஆளுமை மிகு அதிபராக
இருவரும் பதவிகளில் ஒன்றாய்
உள்ளத்தால் ஒன்றித்து ஒருமித்து
சேவைப்பயணத்திலோ வெவ்வேறு இடங்களில்!
காலத்தின் கணிந்த தேவையாய்
கடவுளின் ஆசியாய் பதவியுயர்வு
“கல்வியாளர்” எனும் ஆசிகள்
ஆண்டவன் அருளால் அமைந்திட
அன்பின் அடையாளமாய் என்றும்
நல்ல கணவராய் அன்புத் தந்தையாய்
குடும்பத்தில் சிறந்த உறவாய்
உலகில் சிறந்த மனிதராய்
ஆயுள் நீண்டு ஒருங்கே
ஆரோக்கியம் செல்வம் மனச்சாந்தி பெற்று
சந்தோஷம் நிலைக்க
அகிலம் போற்றும் வாழ்வு பெற
வாழ்த்து மழை பொழிகிறேன்!

கவியரசி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா
பஸ்யால

(26/09/2021 பிறந்த நாள் கொண்டாடும் எந்தன் அன்புக் கணவருக்கு இக்கவிதை சமர்ப்பணம்

கல்விக் கூடத்தில் மாணவர் கல்விக் கல்லூரியில் பயிலுனர் காலங்கள் பல காத்திருந்து கல்லானாலும் கணவன் என கண்ணென எம்.ஏ. முஹம்மது றிப்தியை கணவனெனப் பெற்றேன் நானும்! கடவுள் அமைத்துத் தந்தவர் காதலெனும் அன்பு பொழிந்தவர்…

கல்விக் கூடத்தில் மாணவர் கல்விக் கல்லூரியில் பயிலுனர் காலங்கள் பல காத்திருந்து கல்லானாலும் கணவன் என கண்ணென எம்.ஏ. முஹம்மது றிப்தியை கணவனெனப் பெற்றேன் நானும்! கடவுள் அமைத்துத் தந்தவர் காதலெனும் அன்பு பொழிந்தவர்…