தாய்க்கோர் அஞ்சலி

  • 17

I lost my mom 4 years ago.
The pain is still there.

May Allah forgive all her sins and grant her Jennathul Firdowse. Aameen!

இற்றைக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே திகதியில் எனது அன்புக்குரிய தாயை இழந்து நின்றேன்.
இன்னும் அதன் தாக்கங்கள் தீரவில்லை. உலகமே மாயை என்பதை எந்தன் அன்புத் தீபத்தின் பிரிவு எடுத்தியம்பியது.

எனது தாய் K.T. Rahuma Umma அவர்களுக்கு மேலான சுவனத்தை எல்லாம் வல்ல இறைவன் வழங்குவானாக!
ஆமீன்!

தாய்க்கோர் அஞ்சலி

உறவுகளில் உன்னதம் அவள்
உயிரைப் பணயம் செய்து
உயிராக என்னைப் பெற்று
உலகில் வாழ ஈன்றெடுத்தாள்!

அன்பின் அடையாளம் அவள்
அழகின் உறவுகளக் காட்டி
அவள் தினம் தன்னையே
அன்பில் உருக் குழைத்தாள்!

திடமாக இருந்த என் தாயை
திடீரென இறைவன் அழைத்தது
தீயாக சுடுகிறது இதயத்தை!
தீராத வலியாக இன்னும்!

மேலானவனே மேன்மை யானவனே
மேலான சுவனத்தை சுகமாக
எந்தன் தாய்க்கு வழங்கிடு
அவர் பாவங்களை போக்கிடு ரஹ்மானே!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

கவியரசி எஸ்.ஏ.இஸ்மத் ஃபாத்திமா
பஸ்யால

(27/09/2017 ஆம் திகதி இறையழைப்பை ஏற்றுக் கொண்ட என் அன்புத் தாயின் ஞாபகர்த்தமாய் இந்த கவிதை)

I lost my mom 4 years ago. The pain is still there. May Allah forgive all her sins and grant her Jennathul Firdowse. Aameen! இற்றைக்கு…

I lost my mom 4 years ago. The pain is still there. May Allah forgive all her sins and grant her Jennathul Firdowse. Aameen! இற்றைக்கு…