ஞானசார தேரர் தலைமையில் ஒரே நாடு ஒரே சட்ட செயலணி – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

  • 15

ஒரே நாடு மற்றும் ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

2251/ 30 ஆம் இலக்க 2021.10/26 ஆம் திகதி குறித்த அதி விசேட வர்த்தமாணி வௌியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலணியின் தலைவராக கலகொடஅத்தே ஞானசார தேரரும் செயலாளராக ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஜீவந்தி சேனாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பேராசிரியர் தயானந்த பண்டா, பேராசிரியர் சாந்திநந்தன விஜேசிங்க, பேராசிரியர் சுமேதா சிறிவர்தன, என்.ஜி.சுஜித் பண்டிதரத்ன, சட்டத்தரணி இரேஸ் செனவிரத்ன, சட்டத்தரணி சஞ்சய மரம்பே, எரந்த நவரத்ன, பானி வெவல, காலி மாவட்ட உலமா சபை மௌலவி மொஹம்மட், விரிவுரையாளர் மொஹமட் இந்திகாப், மற்றும் கலீல் ரஹூமான், அஸீஸ் நிசார்தீன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் பணியாக இலங்கையினுள் ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதைச் செயற்படுத்துதல் தொடர்பாகக் கற்றாராய்ந்து அதற்காகச் சட்டவரைவொன்றைத் தயாரித்தல். மற்றும் நீதி அமைச்சினால் இதுவரை இதற்குரியதாக தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவுகள் மற்றும் திருத்தங்களைக் கற்றாராய்ந்து அவற்றின் பொருத்தம் மற்றும் தகுந்த திருத்தங்கள் இருப்பின் அதற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தலும் ஏற்றவாறு உரிய வரைவில் உள்ளடக்குதல் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.

அத்துடன் குறித்த செயலணி குறைந்த பட்சம் மாதத்திற்கு ஒரு முறை தனக்கு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்பதுடன், இறுதி அறிக்கையை 2022 பெப்ரவரி 28ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்பிக்குமாறு ஜனாதிபதியினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஏதேனும் அரசு ஊழியர் அல்லது அமைச்சு திணைக்களம் கூட்டுத்தாபனம் போன்ற நிறுவனத்தின் உத்தியோகத்தர் ஒருவர், குறித்த செயலணியினால் ஒப்படைக்கப்படும் கடமைகளை நிறைவேற்ற தாமதிக்கும் அல்லது தவறும் பட்சத்தில் அது தொடர்பில் தனக்கு அறிவிக்குமாறு குறித்த செயலணிக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

நீதியை நிலைநாட்டுவதில் சட்டத்தின் பாதுகாப்பு சர்வசாதணரமாக்கப்பட வேண்டுமென்பதை கவனத்திற் கொண்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்படுள்ளது.

அத்துடன், இனம், மதம், குலம் அல்லதே வேறேதேனும் காரணத்தினால் எந்தவொரு நபரும் சட்டத்தின் பாகுபாட்டுக்கு அல்லது விசேட கவனத்துக்கு ஆளாகக்கூடாது என்பது அடிப்படை உரிமைகளின் கீழ் காட்டப்பட்டுள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே ஒரே நாடு, ஒரே சட்டம் எனும் எண்ணக்கருவைச் செயற்படுத்தவது தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனித விழுமியங்களை அடையும் முறைமைய என தென்படுவதால் அதனை உறுதி செய்யும் வகையில் குறித்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[pdfjs-viewer url=”https%3A%2F%2Fyouthceylon.com%2Fwp-content%2Fuploads%2F2021%2F10%2F2251-30_t.pdf” viewer_width=100% viewer_height=800px fullscreen=true download=true print=true]

Ibnuasad

ஒரே நாடு மற்றும் ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. 2251/ 30 ஆம் இலக்க 2021.10/26 ஆம்…

ஒரே நாடு மற்றும் ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. 2251/ 30 ஆம் இலக்க 2021.10/26 ஆம்…