வில்பத்து வனப்பகுதி வர்த்தமானி அறிவித்தல்

  • 1

2017.03.24ம் திகதி ஜனா­தி­ப­தியின் ரஷ்­யா­வுக்­கான விஜ­யத்தின் மத்­தியில் வில்­பத்து சர­ணா­ல­யத்­திற்கு வடக்கே அமைந்­துள்ள நான்கு பிர­தே­சங்­களை  உள்­ள­டக்கி அவற்றை பாது­காக்­கப்­பட்ட வன­மாக பிர­க­ட­னப்­ப­டுத்தும் வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்­ப­மிட்­டுள்ளார்.

வில்பத்து வனப்பகுதி தொடர்பாக வெளியான அதிவிசேட  வர்த்தமானி அறிவித்தல் 

Tamil

Sinhala

English

வில்பத்து வனப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 40030.25 ஹெக்டேயர் நிலம் அரச பாதுகாப்பு வனமாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. இதன்படி மவில்லு, வெப்பல், கரடிக்குழி மறிச்சுக்கட்டி பிரதேசங்கள் காட்டுப் பெரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து அப் பிரதேசத்தில் பதற்றநிலை ஏற்பட்டது.

வில்பத்து பிரதேசமானது முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரு பிரதேசமாகும். மேலும் இப்பகுதியில் கடந்த அரசின் இறுதிக் காலம் தொடக்கம் இன்று வரை பல பிரச்சினைகளையும் சட்ட சிக்கல்களையும் எதிர் நோக்கிய பெரதேசமாகும். மேலும் இறுதி வர்த்தமானி அறிவித்தலை தொடர்ந்து பொது மக்களும் சிவில் அமைப்புக்களும் இணைந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த சத்­தி­யாக்­கி­ரகப் போராட்­டத்தில் ஹுனைஸ் நகர், கொண்­டச்சி, அகத்­தி­மு­றிப்பு, பொற்­கேணி, வேப்­பங்­குளம் ஆகிய கிராம மக்­களும் இணைந்­து­கொண்­டனர்.

அத்­துடன் விஷ்ணு அமைப்பு, சிவம் பவுண்­டேஷன் மற்றும் பிர­தேச கிறிஸ்­தவ பாதி­ரி­மார்­களும் இப்­போ­ராட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளித்­தனர்.

முசலி பிர­தேச அனைத்து பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளனம் இதற்கு பூரண ஆத­ர­வு வழங்கினர்.

போராட்­டத்தில் கலந்­து­கொண்டோர் தெரி­விக்­கையில்,

arsatammmm1

பல வரு­ட­கா­ல­மாக நாங்கள் வாழ்ந்த காணி­களை வில்­பத்து பிர­தே­ச­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யதை நாங்கள் வன்­மை­யாகக் கண்­டிக்­கின்றோம்.

எமது பூர்­வீக நிலத்தை பறிப்­ப­தற்கு பதி­லாக பாதாள குழி­யொன்றை தோண்டி எம்மை அதற்கு புதைத்து விடுங்கள். இல்­லையேல் எமக்கு வாழ்­வ­தற்­கான உரி­மை­களை தாருங்கள். இது எமது பூர்­வீகம். இங்கு வாழ்ந்து மடி­வ­தற்கே நாம் விரும்­பு­கிறோம். ஜனா­தி­ப­திதான் இங்கு நாம் வாழ்­வதா? அல்­லது எங்­களை அழிக்­கப்­போ­க­றீரா  என்­பதை தீர்­மா­னிக்க வேண்டும் என ஆர்ப்­பாட்டத்தில் ஈடு­பட்ட பெண்கள் ஆவே­ச­மாகத் தெரி­வித்­தனர்.

அத்­துடன்,  கடந்த ஆட்சிக் காலத்தில் எங்­க­ளுக்கு அநி­யாயம் இடம்­பெற்­ற­தாகத் தெரி­வித்து தான் இந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்­கினோம்.

ஆனால் இந்த அர­சாங்கம் எங்­க­ளுக்கு நல்­லதை செய்­யாமல் எங்கள் உற­வுகள் பரம்­ப­ரை­யாக வாழ்ந்த காணி­யினை கொள்ளை அடிக்கும் சூழ்ச்சி வேலை­களை செய்­துள்­ளது. எங்கள் போராட்­டத்­திற்கு கட்சி அர­சி­ய­லுக்கு அப்பால் அனைத்து அர­சி­யல்­வா­தி­களும் ஒன்­று­சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்­கின்றோம் என்­றனர்.

பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் பயன்படுத்திய வாசகங்கள்.

“நல்லாட்சி அரசே முசலி மக்களை பூர்விக இடத்தில் வாழவிடு”

நல்லாட்சி அரசே வில்பத்துக்குள் வீடு வரவில்லை. வீட்டுக்குள்தான் வில்பத்து வந்ததுள்ளது.”

மிருகங்களுக்கு வாழவிடும் அரசே எமது மக்களின் வல்விடத்தை பறிக்காதே.”

இக்கருத்தை உறுதி செய்யும் விதத்தில் அமைச்சர்களும் தமது கருத்தை வெளியிட்டனர்.

வில்பத்து வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் அமைச்சர் ரிசாத்  பதி­யுதீன் தெரிவித்த கருத்து.

முஸ்லிம்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சியே இது : ரிஷாட்: வில்பத்து வனத்தை விரி­வு­ப­டுத்­து­மாறும், அதனை வன­ஜீ­விகள் பிரதேசமாக பிரகடனப்படுத்துமாறும் ஜனா­தி­பதி உத்­த­ர­விட்­டுள்­ளமை மறிச்­சுக்­கட்­டியில் வாழும் முஸ்­லிம்­களின் பூர்­வீக காணி­களை அர­சாங்கம் அப­க­ரிப்­ப­தற்­கா­க­வாகும். இது ஜனாதிப­தியின் தவ­றான முடி­வாகும். ஞான­சார தேரர், ஆனந்த சாகர தேரர் என்னும் இன­வா­தி­க­ளுடன் இணைந்து ஜனா­தி­பதி மேற்­கொள்ளும் இச்­செயல் திட்­ட­மிட்ட சதியாகும்.

ஜனா­தி­பதி தனது பிழை­யான முடி­வினை மாற்­றிக்­கொள்­ளா­விட்டால் முஸ்­லிம்கள் சார்பில் ஐக்­கிய நாடுகள் சபை வரை சென்று நீதி கேட்­ப­தற்கு தயா­ராக இருக்­கிறேன்.”

நாட்டின் நல­னுக்­கா­கவும் பாதுகாப்பிற்­கா­கவும் பங்­க­ளிப்­புச்­செய்த முஸ்­லிம்­களின் இலட்­சக்­க­ணக்­கான ஏக்கர் காணி­க­ளுக்கு ஜனா­தி­பதி துரோகம் செய்ய எத்­த­னித்­துள்­ளமை மக்­களை கவலையடையச் செய்­துள்­ளது. நாட்டின் தலை­வ­ராக, ஜனா­தி­ப­தி­யாக மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆட்­சி­யி­ல­மர்த்த பங்­க­ளிப்பு செய்த முஸ்­லிம்­களை அவர் கறி­வேப்­பி­லை­யாக கரு­தி­யி­ருக்­கின்றார்.

ஜனா­தி­ப­தியின் கூற்­றுப்­படி மறிச்­சுக்­கட்டி, கர­டிக்­குளி, பாலக்­குழி, கொண்­டச்சி, முள்­ளிக்­குளம் பிர­தே­சங்­களில் மீள்­கு­டி­யே­றி­யுள்ள மக்கள் பாதிப்­புக்­குள்­ளா­க­வுள்­ளனர். இதே­வேளை 1938 ஆம் ஆண்டு வன ­ப­ரிபா­லன திணைக்­க­ளத்­துக்குச் சொந்­த­மா­ன­தென வர்த்­த­மானி அறி­வித்தல் செய்­யப்­பட்ட கலா­போ­கஸ்­வெவ எனும் பிர­தேச காணி­களே காணிக் கச்சேரி நடத்­தப்­ப­டாது எவ்­வித சட்ட ஏற்­பா­டு­க­ளு­மின்றி தென் இலங்கை சிங்­கள மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

வட­மா­கா­ணத்தில் சுமார் 40 பிர­தேச செய­ல­கங்­களில் முசலி பிர­தேச செய­லகப் பிரி­வி­லேயே முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழ்­கின்­றனர். எனவே முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான சதித் திட்­ட­மா­கவே நாங்கள் இதைக் கரு­து­கிறோம்.”

வில்பத்து வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில்  பொறி­யி­ய­லாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் தெரிவித்த கருத்து.

“வில்­பத்து விவ­கா­ரத்தில் முஸ்லிம் தரப்பின் நியா­யத்­தையும் பிரச்­சி­னை­க­ளையும் காது­தாழ்த்­தாது ஒரு­த­லைப்­பட்­ச­மாக முடி­வெ­டுத்­தி­ருக்­கின்­றமை தெளி­வா­கின்­றது. அண்­மையில் சைட்டம் விவ­காரம் பூதா­க­ர­மாக வெடித்­த­போது அனைத்து தரப்­பு­டனும் பேசி சம­ர­சத்­துக்கு வரலாம் என குறிப்­பிட்ட ஜனா­தி­பதி, ஏன் இவ்­வி­ட­யத்தில் முஸ்­லிம்­களின் கருத்­துக்­களை ஆரா­ய­வில்லை என கேள்வி எழுப்ப வேண்­டி­யி­ருக்­கி­றது.

மறிச்­சிக்­கட்டி, மாவில்லு, வெப்பல், விளாத்­திக்­குளம் மற்றும் பெரிய முறிப்பு உள்­ள­டங்­கிய பகு­திகள் பாது­காப்­பட்ட வன­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யமை பெரும் தவ­றாகும். இதில் ஜனா­தி­பதி பேரி­ன­வா­தி­களின் கருத்­துக்­க­ளுக்கே முன்­னு­ரி­மை­ய­ளித்து அவர்­களின் நோக்­கத்தை நிறை­வேற்­றி­யி­ருக்­கின்றார்.

மறிச்­சிக்­கட்டி உள்­ளிட்ட பகு­திகள் முஸ்லிம் மக்­களின் பூர்­வீக காணிகள் என அண்­மையில் அங்கு சென்று கள ஆய்வை மேற்­கொண்டு வந்த சூழ­லி­ய­லா­ளர்கள் குறிப்­பிட்டும் ஜனா­தி­பதி இவ்­வாறு வர்த்­த­மானி அறி­வித்­தலில் ஒப்­ப­மிட்­டி­ருப்­பது முஸ்லிம் சமூ­கத்­திற்கு பெரும் ஏமாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இது முஸ்லிம் மக்­களின் உரி­மை­களில் கைவைக்கும் செயற்­பா­டாகும். மக்­களின் சொந்த காணி­களை திட்­ட­மிட்டு அப­க­ரிக்கும் செயற்­பா­டாகும்.

இந்த அர­சாங்கம் மக்­களின் உரி­மை­களை கொடுப்­ப­தற்கு பதி­லாக பறிக்­கி­றது. இவர்­க­ளிடம் எவ்­வாறு சலு­கை­களை பெற்றுக் கொள்ள முடியும் எனும் கேள்வி எழுந்­தி­ருக்­கி­றது.

இதே­வேளை, இவ்­வி­ட­யத்தில் முஸ்லிம் அர­சியல் பிர­தி­நி­திகள் பெரும் தவ­றினை இழைத்­தி­ருக்­கின்­றனர். வில்­பத்து விட­யத்தில் அவர்­களால் வெறும் விளம்­ப­ரத்­திற்­காக ஹோட்­டல்­களில் கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தவே முடிந்­தது. ஆனால், முஸ்லிம் எம்.பி.க்கள் ஒன்­றி­ணைந்து ஜனா­தி­ப­தியை நேர­டி­யாக சந்­திக்க முடி­யாது போனது.

இது இரண்­டா­வது வர்த்­த­மானி பிர­க­ட­ன­மாகும். 2012 ஆம் ஆண்டு இதே­ போன்­ற­தொரு வர்த்­த­மானி பிர­க­டனம் வெளியி­டப்­பட்­டது. எனினும் அவ்­வாறு பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்ட பகுதி ஒப்­பீட்­ட­ளவில் தற்­போது பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்ட பகு­தியை விடச் சிறி­ய­தாகும். இந்­நி­லையில் முத­லா­வது பிர­க­டனம் வெளி­யி­டப்­பட்­டமை 2015 ஆம் ஆண்­டு­வரை தனக்குத் தெரி­யாது என அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் தெரி­வித்தார். அப்­போதும் அவர் அமைச்­ச­ர­வையில் அங்கம் வகித்தார்.

அச்சமயம் முசலி பிர­தேச சபை அமைச்சர் ரிஷாத் தலை­மை­யி­லான கட்­சியின் ஆட்­சி­யி­லேயே இருந்­தது. அவ்­வா­றி­ருந்தும் அன்று அதனை தடுத்து நிறுத்­து­வ­தற்­கான எந்­த­வித முயற்­சி­யையும் அவர்கள் செய்­ய­வில்லை.  அதன் பிற்­பாடு பல தேர்­தல்கள், சந்­தர்ப்­பங்கள் வாய்த்த போதிலும் 2012 இன் வர்த்­த­மானி பிர­க­ட­னத்தை இரத்துச் செய்­வ­தற்­கான எந்த முயற்­சி­க­ளையும் அமைச்சர் ரிஷாடோ ஏனைய முஸ்லிம் தலை­வர்­களோ மேற்­கொள்­ள­வில்லை.

அதற்­கான எதிர்ப்­பு­களைக் கூட கூட்­டாக வெளி­யி­ட­வில்லை.  இன்றும் அமைச்சர் ரிஷாடும் ஏனை­யோரும் அமைச்­ச­ர­வையில் அங்கம் வகிக்கும் நிலை­யில்தான் மற்­று­மொரு வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யா­கி­யி­ருக்­கி­றது.  இதன் மூலம் 2012 இல் வனப் பகு­தி­யாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்ட பகு­தியை விட பெரும் பரப்பு 2017 இல் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதி மிகவும் தந்­தி­ர­மாக செயற்­பட்டே இந்த விட­யத்தை மேற்­கொண்­டுள்ளார். இவ்­வி­ட­யத்தில் பிர­தமர் தொடர்ந்தும் மெள­ன­மா­கவே இருக்­கின்றார். நாட்டின் நிர்­வா­கத்தை முழு­மை­யாக முன்­னெ­டுக்கும் அவர் எதுவும் தெரி­யா­தது போல இருக்­கின்றார். எங்­களை இந்த அர­சாங்கம் தொடர்ந்தும் ஏமாற்­று­கின்­றது. நாம் ஓர் அபா­ய­க­மான நிலைக்கே தள்­ளப்­பட்­டி­ருக்­கிறோம்.

முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் இவ்­வா­றான இக்­கட்­டான சந்­தர்ப்­பங்­களில் ஒன்­று­பட்டு தமது எதிர்ப்பை வெ ளிப்­ப­டுத்த வேண்டும். ஜனா­தி­ப­தியை கூட்­டாகச் சென்று சந்­தித்து இந்த அறி­வித்­தலை இரத்துச் செய்­யு­மாறு கோர வேண்டும். ஆனால் அவ்­வாறு எத­னையும் இவர்கள் செய்­ய­வில்லை. இக்­கட்­டான சம­யங்­களில் முஸ்லிம் எம்.பி.க்கள் இவ்­வாறு கையா­லா­காத்­த­ன­மாக நடந்து கொள்­வது இதுவே முதல்­முறை அல்ல. அளுத்­கம சம்­ப­வத்தின் போதும் முஸ்­லிம்கள் சந்­தித்த ஏனைய கஷ்­ட­மான சூழல்­களின் போதும் சமூக நலன்­க­ருதி இவர்கள் ஒன்­று­பட்டு போரா­ட­வில்லை என்­ப­தையும் இந்த இடத்தில் கவ­லை­யுடன் சுட்­டிக்­காட்ட விரும்­பு­கிறேன்.

மஹிந்த அர­சாங்கம் ஆரவார­மா­கவும் வெளிப்­ப­டை­யா­கவும் இன­வா­தி­க­ளுக்கு சார்­பாக செயற்­பட்டு அவர்­களின் நோக்­கங்­களை நிறை­வேற்ற துணை போனது. ஆனால் இந்த அர­சாங்கம் மிகவும் அமை­தி­யா­கவும் சூட்­சு­ம­மான முறை­யிலும் இன­வா­தி­க­ளுக்கு உத­வு­கி­றதுமஹிந்த அர­சாங்கம் ஆரவார­மா­கவும் வெளிப்­ப­டை­யா­கவும் இன­வா­தி­க­ளுக்கு சார்­பாக செயற்­பட்டு அவர்­களின் நோக்­கங்­களை நிறை­வேற்ற துணை போனது. ஆனால் இந்த அர­சாங்கம் மிகவும் அமை­தி­யா­கவும் சூட்­சு­ம­மான முறை­யிலும் இன­வா­தி­க­ளுக்கு உத­வு­கி­றது.”

என்றாலும் மேற்படி கருத்துக்கள் தவறானது. இவ் அறிவித்தலின்படி பொதுமக்களது காணிகளோ பள்ளிவாசல்களோ அரச உரிமை ஆக வில்லை என கருத்தை முன்வைத்தோர்.

 வில்பத்து வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்த கருத்து.

“எமது சரணாலயப் பகுதிகளைப் பாதுகாக்கும் நோக்கில் ஜனாதிபதி இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தைத் தடுப்பதற்காகவோ, முஸ்லிம் மக்களின் பூர்வீகக் காணிகளை இல்லாமல் செய்வதற்காகவோ இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை என்பதை நான் பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன். வனப்பாதுகாப்பை ஏற்படுத்துவதன் ஊடாக முஸ்லிம் மக்களுக்கு பிரச்சினை ஏற்படுத்தும் எவ்வித எண்ணமும் இல்லை. எவருக்கேனும் தமது பூர்வீகக் காணி தொடர்பில் ஏதேனும் பிரச்சினை இருந்தால், வர்த்தமானியில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.”

வில்பத்து வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்த கருத்து.

சரணாலயத்திற்கு சொந்தமான பகுதிகளே கோடுகளின் மூலம் காண்பிக்கப்பட்டுள்ளன. மஞ்சள் நிறத்தில் காண்பிக்கப்பட்டுள்ள பகுதிகளிலேயே முஸ்லிம் மக்களின் வீடுகள் உள்ளன. முஸ்லிம் மக்களின் வீடுகள் மற்றும் பள்ளிவாசல் அதனுள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இது தவறானதொன்றாகும். வன பாதுகாப்பிற்கு சொந்தமான காணிகளை சரணாலய பாதுகாப்பு பகுதிகளாகவும் மக்கள் வாழும் பகுதிகளை வனப்பாதுகாப்பில் இருந்து வேறுபடுத்தவுமே இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. மீண்டும் ஒருமுறை நாட்டிற்குள் இனவாதத்தை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் இதனூடாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மிகவும் அதிருப்தியடைந்துள்ளார்.

இறுதியாக வில்பத்து வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்த கருத்து
“இந்த வர்த்தமானியின் மூலம் தற்போது மக்கள் வாழ்ந்துவரும் கிராமங்கள் காணிகள், வீடுகள் மற்றும் இஸ்லாமிய புனித ஸ்தலங்கள் என்பன அரசிற்கும் வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்கும் கையகப்படுத்தப்பட்டுள்ளது என தனிப்பட்ட மற்றும் அரசியல் நோக்கங்களுடன் சிலர் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள காணிகளுக்கு அண்மித்ததாக காணப்படும் வனப் பகுதியினதும் பிரதேச மக்களினதும் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் நோக்குடனேயே இந்த வனப்பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசமாக பெயரிடப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆகையினால் குறிப்பிட்ட பிரதேசங்களில் தற்போது வாழ்ந்து வரும் மற்றும் மக்களுக்கு சட்டபூர்வமான உரிமை காணப்படும் கிராமங்கள், காணிகள் வீடுகள் மற்றும் இஸ்லாமிய வணக்க ஸ்தலங்கள் ஆகிய எதுவுமே இந்த வர்த்தமானியின் ஊடாக அரசிற்கு கையகப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கின்றேன்.”
இதன்படி பொதுமக்களின் வாழ்விடத்தை அரசு கைப்பற்றவில்லை என அரசு தெரிவிக்கின்றது. 

Ibnu Asad

2017.03.24ம் திகதி ஜனா­தி­ப­தியின் ரஷ்­யா­வுக்­கான விஜ­யத்தின் மத்­தியில் வில்­பத்து சர­ணா­ல­யத்­திற்கு வடக்கே அமைந்­துள்ள நான்கு பிர­தே­சங்­களை  உள்­ள­டக்கி அவற்றை பாது­காக்­கப்­பட்ட வன­மாக பிர­க­ட­னப்­ப­டுத்தும் வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்­ப­மிட்­டுள்ளார். வில்பத்து வனப்பகுதி தொடர்பாக வெளியான அதிவிசேட  வர்த்தமானி…

2017.03.24ம் திகதி ஜனா­தி­ப­தியின் ரஷ்­யா­வுக்­கான விஜ­யத்தின் மத்­தியில் வில்­பத்து சர­ணா­ல­யத்­திற்கு வடக்கே அமைந்­துள்ள நான்கு பிர­தே­சங்­களை  உள்­ள­டக்கி அவற்றை பாது­காக்­கப்­பட்ட வன­மாக பிர­க­ட­னப்­ப­டுத்தும் வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்­ப­மிட்­டுள்ளார். வில்பத்து வனப்பகுதி தொடர்பாக வெளியான அதிவிசேட  வர்த்தமானி…

7 thoughts on “வில்பத்து வனப்பகுதி வர்த்தமானி அறிவித்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: