அல்லாஹ்வின் உதவி எங்கிருந்தாலும் வரும்.
- by admin
- 14
துபாயில் வேலை செய்யும்போது வேலைக்கு சேர்ந்து சுமார் ஒன்றரை மாதங்கள் முதல் மாத சம்பளத்தை எடுத்து முழுவதுமாக நாட்டுக்கு அனுப்பி விட்டேன் கையில் கொஞ்சம் பணம் இருந்தது அதுவும் தீர்ந்து விட்டது ஓரிரு நாட்களில் சாப்பிடுவதற்கு காசு இல்லாமல் இருக்கும் வேளையிலே 60 திர்ஹம் எனது அக்கவுண்டில் இருப்பது ஞாபகம் வந்தது எனது ஆபிசுக்கு அருகாமையில் இருக்கும் ஏடிஎம்முக்கு பணம் எடுப்பதற்காக சென்றேன்.
அங்கு பண அட்டையை உட்செலுத்திய பின் 100 திர்ஹம் மேற்பட்ட பணம் இருந்தால்தான் எடுக்க முடியும் 100 திர்ஹம் குறைவாக இருக்கும் பணத்தை எடுக்க முடியாது என்று அந்த மெஷின் கூறியது. செய்வது அறியாமல் திணறிப்போய் சோகமாய் வீதியால் சென்று கொண்டிருக்கும்போது BMW காரொன்று என்னை தாண்டிச் சென்றது பிறகு அந்த கார் பின்னோக்கி வந்தது அதில் ஒரு அரபி வெளியே வந்து பிரதர் கொஞ்சம் நில்லுங்கோ என்றார் நான் அப்படியே சிறிது நேரம் காத்திருந்தேன் அவர் ஏடிஎம்முக்கு சென்று என்னிடம் மீண்டும் வந்தார் 100 திர்ஹம் காசு எனக்கு அன்பளிப்பாகத் தந்து அவருக்காக துவா செய்யுமாறு கூறினார் அந்த இடத்திலேயே நான் அழுது அல்லாஹ்விடம் அவருக்காக துஆ செய்தேன்.
அந்த சம்பவம் என் வாழ்வில் ஒரு மிகப்பெரிய ஒரு பாடமாக அமைந்தது எந்த நேரத்திலும் அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையை நாங்கள் இழக்கக்கூடாது அல்லாஹ் அவனுடைய அருட்கொடையை ஏதாவது ஒரு வழியில் அனுப்பி வைப்பான் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
பிறருக்கு உதவுங்கள் அல்லாஹ் உங்களுக்கு உதவுவான்
FARHATH RAHMAN sarayi
துபாயில் வேலை செய்யும்போது வேலைக்கு சேர்ந்து சுமார் ஒன்றரை மாதங்கள் முதல் மாத சம்பளத்தை எடுத்து முழுவதுமாக நாட்டுக்கு அனுப்பி விட்டேன் கையில் கொஞ்சம் பணம் இருந்தது அதுவும் தீர்ந்து விட்டது ஓரிரு நாட்களில்…
துபாயில் வேலை செய்யும்போது வேலைக்கு சேர்ந்து சுமார் ஒன்றரை மாதங்கள் முதல் மாத சம்பளத்தை எடுத்து முழுவதுமாக நாட்டுக்கு அனுப்பி விட்டேன் கையில் கொஞ்சம் பணம் இருந்தது அதுவும் தீர்ந்து விட்டது ஓரிரு நாட்களில்…