திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 15
- by admin
- 11
இங்கு நட்புக்கள் இருவருக்கும் அவ்வளவு சந்தோஷம். இருவர் முகங்களும் ஆனந்தத்தால் நிறைந்திருக்க, வத்சலா தான் பேச்சுப் போட்டாள்.
என்னடி வீட்டுல நீயும் புள்ளயும் மட்டுமா?
கூடுதலா அப்படி தான் டி..
புருஷன் இப்போ ரொம்ப பிசி ஆவிட்டாரு. இன்னக்கியும் ஏதோ முக்கியமான வேல ஒன்னு இருக்காருன்னு போயிட்டாரு.
ஹ்ம்ம் எல்லாருக்கும் இந்த நிலம போல தானிருக்கு.
என்ன செய்யடீ? நாங்க தான் விட்டுக் கொடுத்து போவனும்.
ஹ்ம்ம்..
உனக்கு என்ன கொண்டு வர? டீ, கூல்? ஏதாச்சும் சொல்லு.
டீ நல்லம்..
இன்னம் இந்த டீ ய விடல்லயா நீ??
இருவரும் சிரித்துக் கொள்கின்றனர். ராதா வத்சலாவுக்கு தேநீர் பறிமாறுகின்றாள். இப்படியே வீட்டு நடப்புக்களில் துவங்கி, எங்கெங்கோ கதை நீள்கின்றது.
“எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ராதா…
எனக்கும் தான், அவங்களும் இருந்திருந்தா ரொம்ப நல்லா இருந்திருக்கும்.
ஆமாம் டி, புருஷன்மார் ரெண்டு பேரயும் பிரன்டஸ் ஆக்கி விட்டா எவ்வளவோ நல்லம் தான்.” பாவம் எதுவும் அறியாமல் ஏதேதோ கதைத்துக் கொள்கின்றனர்.
சாப்பாடு வைக்கட்டுமா வத்சலா? கதையின் ஆழத்தில் நேரம் போனதே விளங்காதது போல் இருவரும் கடிகாரத்தை பார்க்கின்றனர்.
சரி டீ.. நேரம் போனதே விளங்கல்ல, வீடு போகவும் வேணும்.
என்ன அவசரம் உனக்கு. என் புருஷன் வரும்வர இருந்து தான் போகனும். அவர உனக்கு இன்டரடியூச் பண்ண வேண்டாமா?
“சரி” என்பது போல் சிரிக்கின்றாள் வத்சலா…
நேரம் நகர சுந்தர் வந்த பாடில்லை, நண்பியின் வேண்டுதலை மீறி போக முடியாமல் வத்சலாவும் காத்திருக்கின்றாள் ராதாவின் கணவனுக்காக, தன்னவனென அறியாமலே. திடீரென வத்சலாவின் குட்டிக் குழந்தை அழத் துவங்கிவிடவே பிள்ளையை தூக்கிக் கொண்டு ராதாவின் அறைக்குள் செல்கின்றாள் வத்சலா. அங்கு அவளுக்கு பெரும் அதிர்ச்சி, கண்கள் தானாகவே கலங்கி விட, ராதாவும் சுந்தருமாய் சேர்ந்து எடுத்த புகைப்படம் அறைச் சுவரில் பெரிதாக மாட்டியிருக்கின்றது. அதற்குள் சுந்தரமும் இவ்வளவு தாமதமாகி வத்சலா போயிருப்பாள் என்ற நினைப்பில. மனைவி ராதாவை சமாளிக்கும் திட்டத்தோடு வீட்டுக்குள் நுழைகின்றான்.
கதை தொடரும்…
Ruwaiza Razik
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்
இங்கு நட்புக்கள் இருவருக்கும் அவ்வளவு சந்தோஷம். இருவர் முகங்களும் ஆனந்தத்தால் நிறைந்திருக்க, வத்சலா தான் பேச்சுப் போட்டாள். என்னடி வீட்டுல நீயும் புள்ளயும் மட்டுமா? கூடுதலா அப்படி தான் டி.. புருஷன் இப்போ ரொம்ப…
இங்கு நட்புக்கள் இருவருக்கும் அவ்வளவு சந்தோஷம். இருவர் முகங்களும் ஆனந்தத்தால் நிறைந்திருக்க, வத்சலா தான் பேச்சுப் போட்டாள். என்னடி வீட்டுல நீயும் புள்ளயும் மட்டுமா? கூடுதலா அப்படி தான் டி.. புருஷன் இப்போ ரொம்ப…