திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 17

  • 10

ஆனால் தன் மூத்த மனைவி ராதா தன்னைப் பின் தொடர்ந்து வருவாளென சுந்தர் கனவிலும் நினைத்திருக்கவில்லை

வேகமும், பதற்றமும் அதிகமாக ஒருவாறு வத்சலா இருக்கும் இருப்பிடத்தை  அடைந்தான் சுந்தர். பின்னாலே வந்த ராதா, ‘இது வத்சலா சொன்ன இடம் போல இருக்கே’ குழம்பிப் போனாள்.

வீட்டைச் சூழ ஒரே ஆரவாரம், பக்கத்து வீட்டினர், பாதைப் பயணிகள், என எல்லோரும் பார்வையாளர்களாய் குழுமி இருந்தனர்.

என் வத்சலவாவுக்கு ஏதும் நடந்து விட்டதோ?’ துடித்துப் போனான் சுந்தர். ‘இந்த ஆம்புளகளே இப்புடித் தான், அநியாயமா ஒரு உயிர் போயிட்டே’ ஊர் வாயை மூட முடியாமல் இருக்க அத்தனையையும் தாண்டி தன் வத்சலாவின் நிலை காண விரைந்தான். அவனுக்கேதோ எல்லாமே தப்பாகத் தோன்றியது. நகர்ந்தான். கை கால்கள் எல்லாம் நடுங்க முன்னாகிப் போனான்.

வ.. வத்.. வ.. வத்சலா..

நம்ப முடியாமலிருந்தது. கண்ணீர் பெருக்கெடுத்தோட, தன்னவளை கட்டிப் பிடித்துக் கொண்டான். ஆம் வத்சலா தன் நட்புக்கு துரோகம் செய்து விட்ட, அசிங்கத்தோடு வாழ விரும்பாமல் தன்னையே மாய்த்துக் கொண்டு நிரந்தரமாய் கண்களை மூடிக் கொண்டிருந்த காட்சி, கல் நெஞ்சையும் உருக வைக்கும். இப்படியொரு நிகழ்வை சுந்தர் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை..

“வத்சலா.. என் வத்சலா.. எழும்பு வத்சலா.. என்ன விட்டுப் போயிடாத, எனக்கு நீ வேணும் வத்சலா, என்னப் பாரு, என்ன மன்னிச்சிக்க வத்சலா, ஐயோ நான் எதிர்பார்க்கல்லயே, என் வத்சலா எனக்கு வேணும், கடவுளே இது கனவா இருக்கக் கூடாதா? என் வத்சலாவ விட்டு நான் எப்படி இருப்பன்? உன் சாவுக்கு நான் காரணமா போயிட்டேனே வத்சலா” சின்னவன் போல் தேம்பித் தேம்பி அழுத சுந்தருக்கு தலையே சுற்றிக் கொண்டு வந்தது.

திடீரென தன் பிள்ளையின் நினைவு வர, ‘என் குழந்த, என் குழந்த எங்க?’ சுற்றும் முற்றும் தேடியவன் தன் சின்ன மகனைக் காணாது, வேகமாக அறைக்குள் சென்றான்.

அங்கு அவனுக்கு இன்னுமோர் பேரதிர்ச்சி காத்துக் கிடந்தது. மீண்டும் விம்மி அழத் துவங்கி விட்டான். அவனுக்கு எதுவும் நிஐம் போல் தோன்றவில்லை.. உள்ளே ஓடிச் சென்றான்.

கதை தொடரும்…
Ruwaiza Razik
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

 
 

ஆனால் தன் மூத்த மனைவி ராதா தன்னைப் பின் தொடர்ந்து வருவாளென சுந்தர் கனவிலும் நினைத்திருக்கவில்லை வேகமும், பதற்றமும் அதிகமாக ஒருவாறு வத்சலா இருக்கும் இருப்பிடத்தை  அடைந்தான் சுந்தர். பின்னாலே வந்த ராதா, ‘இது…

ஆனால் தன் மூத்த மனைவி ராதா தன்னைப் பின் தொடர்ந்து வருவாளென சுந்தர் கனவிலும் நினைத்திருக்கவில்லை வேகமும், பதற்றமும் அதிகமாக ஒருவாறு வத்சலா இருக்கும் இருப்பிடத்தை  அடைந்தான் சுந்தர். பின்னாலே வந்த ராதா, ‘இது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *