திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 22

  • 8

இடைவேளை நேரம் “சுரேஷ், சுரேஷ்” அழைத்தது வசீகரா தான்..

துவரை எந்தப் பெண்களுடனும் பெரிதாக பேச்சுக் கொடுக்காதவன் வசீகராவின் அழைப்பு கேட்டு நடுங்கிப் போனான். அதுவும் தான் உள்ளத்தளவில் விரும்பும் பெண்ணாக அவளிருக்க, அவனுக்கு ஏதோ ஒரு பதற்றமாக இருந்தது.

“சுரேஷ்” மீண்டும் அவளழைக்க அவன் நா தடுமாறியது.

“ஓம்

உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்

என்னா?” எதுவுமே அறியாதவன் போல் கேள்விக் கணையோடு வசீகராவை நோக்கினான்.

“சத்தியமா நான் என்ன பேச வந்திருக்கன்னு உங்களுக்கு தெரியாதா சுரேஷ்?

சொல்லாமா எப்படி தெரியும்?

அப்போ ஊகிக்க முடியாதளவுக்கு தெரியாம இருக்கா?

என்னான்டு சொல்லுங்களேன்..

ஒன்னும் இல்ல ஐ யம் சொறி..” எடுத்த எடுப்புக்க சொல்லிவிட்டு திரும்பி விட்டாள் வசீகரா.

“ஏ வசீகரா.. கொஞ்சம் நில்லு” திரும்பிப் பார்க்காமல் அப்படியே நின்றாள்.

“வசீகரா ரியலி ஐ லவ் யூ” அவள் அதனை எதிர்பார்க்கவில்லை. ஏதோ உணர்ச்சிப் பெருக்கீட்டில் சொன்ன சுரேஷுக்கும் “தானா இது” என்று தடுமாற்றமாய் போயிட்டு.

இதழ் நிறைந்த புன்னகையுடன் சுரேஷை திரும்பி நோக்கியவள் தினறிப் போனாள். சுரேஷின் முகம் முழுதும் வியர்வைத் துளிகளால் நிறைந்திருக்க, வழமைக்கு மாற்றமாக அவன் நின்றிருந்தான்.

“சுரேஷ் ஆர் யூ ஓகே?” பதிலுக்கு எதுவும் பேசாது வேகமாகச் சென்றவனை வியப்புச் சுவையுடன் பார்த்து நின்றாள் வசீகரா.

இப்படியே இவர்கள் காதல் துளிர் விட்டு மலர, எதுவும் அறியா சுரேஷ் குடும்பம் வாணியின் திருமணப் பேச்சில் மூழ்கிப் போயிருந்தனர். ஆனால் அபத்தம் அதுவரை வந்தவர்கள் யாருக்கும் வாணி மீது பிடிப்பிருக்கவில்லை.

“நீ கவலப் படாத அக்கா, உன் வாழ்க்கைய அந்த கடவுள் நல்லா தான் வரைந்து வெச்சிருப்பான்” மூத்தவளுக்கு ஆறுதலாய் என்றும் இயம்பும் சுரேஷ் கடவுள் தன் அக்காவின் விடியலை தன் கைகளில் செதுக்கியிருப்பான் எனக் கனவிலும் நம்பியிருக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் தான் அன்று சுரேஷின் செவிகளில் அந்த பேரிடி வந்து விழுந்தது. ஆத்திரமும் ஆவேஷமும் மேலிட கத்திக் கதறினான்..

கதை தொடரும்…
Ruwaiza Razik
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

இடைவேளை நேரம் “சுரேஷ், சுரேஷ்” அழைத்தது வசீகரா தான்.. துவரை எந்தப் பெண்களுடனும் பெரிதாக பேச்சுக் கொடுக்காதவன் வசீகராவின் அழைப்பு கேட்டு நடுங்கிப் போனான். அதுவும் தான் உள்ளத்தளவில் விரும்பும் பெண்ணாக அவளிருக்க, அவனுக்கு…

இடைவேளை நேரம் “சுரேஷ், சுரேஷ்” அழைத்தது வசீகரா தான்.. துவரை எந்தப் பெண்களுடனும் பெரிதாக பேச்சுக் கொடுக்காதவன் வசீகராவின் அழைப்பு கேட்டு நடுங்கிப் போனான். அதுவும் தான் உள்ளத்தளவில் விரும்பும் பெண்ணாக அவளிருக்க, அவனுக்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *