காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 84

  • 13

“என்னது நானா இங்க ஒன்றும் வரல்ல… உங்க ஆளுதான் என்னை இங்க தூக்கிட்டு வந்தாரு… நான் இங்கே இருந்து போக போனதும்… இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு இங்கேயே இருக்கும் படி மிரட்டினாரு… அதனால தான்….”

என்றாள்.

“அதெல்லாம் எனக்கும்… தெரியும்… உன் பெயர் என்ன சொன்னே…. ஆஹ்… லீஸா… ரொம்ப நேரம் அவனோட ஏதோ பேசிட்டு இருந்ததா என்னோட ஆளுங்க சொன்னாங்க அது உண்மை தானா?”

என்று கேட்டான்.

“ஆமா அவர்தான் என்னோட பிரச்சினை என்ன அதை ஒரு நண்பனா என்னோட பகிர்ந்து கொள் என்றார்.”

என்றாள் தயங்கி கொண்டே,

“அப்படியா… அதுக்காக மிட் நைட் தாண்டியும் உன் புராணத்தை சொல்லிகிட்டே இருப்பியா?”

என்று குறுக்க கேள்வி கேட்டான் மித்ரத்.

“ஆ… அது… அதுவும் அவர்தான்.”

என்று ஏதோ சொல்ல வர மித்ரத் கோபத்தில்,

“ஸ்டாப் இட்..”

என்று சொல்லி கொண்டே அங்கிருந்த மின் விளக்குக்கு சுட்டான். ஜெனி மிரண்டு போனாள். துப்பாக்கி சத்தத்தில் என்கிடு கண்ணைவிழித்தான். அவன் எழுந்திருக்கும் போது பெட் சீட்டில் புதைந்து கிடந்த டிவைஸ் அவனது கை பட்டு ஆன் ஆகிவிடவே இங்கே கிரீச் கிரீச் என்ற லேப்டாப்பில் வந்த சத்தம் கேட்டு விக்டரும் கில்கமேஷும் எழுந்து கொண்டனர். அதை காதில் மாட்டி கொண்டதும் அவர்கள் பேசுவது எல்லாம் இவர்களுக்கு கேட்டது.

****************

“என்ன நடக்குது இங்கே…. மித்ரத் நீ எப்போ வந்தே?”

என்று ஆச்சர்யமாக கேட்டான் என்கிடு.

“நீதான் வரவெச்சே என்கிடு… நான் அவ்வளவு சொல்லியும் யாரோ ஒரு பொண்ணு கூட இவ்வளவு க்ளோஸ்ஸா பழகிட்டு இருக்கே… என்னாச்சு உனக்கு…”

என்று கேட்டான். என்கிடுவுக்கு பழைய விடயங்கள் யாவும் நினைவுக்கு வந்திருக்கும் என்று ஜெனி நினைத்தாள்.

“ஏதோ சொந்தகதை சோகக்கதை சொன்னாளாமே உண்மையா.”

என்று கேட்டான். அவள் கில்கமேஷ் ஆள் என்பதை அறிந்தும் சட்டென அவளை மாட்டிக்கொடுக்க விரும்பாமல்.

“ஆமா… நான் தான் அவகிட்ட உன்னோட கஷ்டங்களை என்னோடு பகிர்ந்து கொள் என்றேன்” என சொன்னான்.

“ஆமா… நீ ஏன் இங்க வந்தே… அப்படி என்ன அக்கறை இவ மேல… எங்களுக்கு இவ மேல சந்தேகமா இருக்கு… இவ கண்டிப்பா அந்த கில்கமேஷ் ஜெனி அனுப்பின ஆளா தான் இருப்பா…… அதனால இவளை கொன்னுடலாம் என்று இருக்கோம்.”

என்றான் மித்ரத். இதை இங்கிருந்து கேட்டுக்கொண்டிருந்த கில்கமேஷ் பதறிப்போனான்.

“இனிமேல் தாமதிக்க முடியாது.. சீக்கிரம் போய் ஜெனியை காப்பாத்தனும்.”

என்று சொல்ல விக்டரும் அதை ஆமோதித்தான். இருவரும் உடனே காரில் ஏறிக்கொண்டனர். எதற்கும் பயன்படும் என்றெண்ணி மின் அதிர்ச்சி கொடுக்கும் கைக்கு அடக்கமான கருவிகள் இரண்டையும் புகையை ஏற்படுத்தும் போலி குண்டுகள் இரண்டையும்எடுத்து போட்டு கொண்டனர். இவர்கள் புறப்படும் போது தான் அந்த தெருமுனையில் டிடானியா வந்து கொண்டிருந்தாள்.

“அட இவ்வளவு வேகமா எங்க போறாங்க ஒருவேளை ஜெனிக்கு ஏதும்” என்று எண்ணிவிட்டு விக்டரின் வீட்டுக்கே சென்றாள். அங்கே கிடந்த கருவியை காதில் போட்டுக்கொண்டதும் அவளுக்கு கேட்க ஆரம்பித்தது.

**********************

“என்னது கொல்றதா…. சே சே அதெல்லாம் வேண்டாம்… அவ அவங்க ஆளா இருக்க வாய்ப்பில்லை…. நானா தான் அவளை இங்க கூட்டிட்டு வந்தேன்…. “

என்றான்.

“அப்படின்னா ஒரு விஷயத்தை உனக்கு காட்டலாம் என்று நினைக்கேன் என்கூடவா.”

என்று சொல்லி விட்டு வெளியே செல்ல எங்கே இவளை கொன்றுவிடுவானோ என்று என்கிடுவும் பயப்பட்டான். லீஸாவை அவர்கள் இருவரும் இழுத்து வர மித்ரத் சி சி டிவி கன்ட்ரோல் அறைக்கு அவர்களை கூட்டி சென்றான். அந்த அறை வெளியே இருந்தது.

அதிலே கட்டிலுக்கு அடியில் ஜெனி எதையோ தேடுவதயும் அடுத்து என்கிடு கண்ணில் படாமல் ஏதோ ஒன்றை மறைப்பதையும் காட்டினான். கண்காணிப்பாளர்களால் கண்டுபிடிக்க முடியாத இந்த விடயத்தை மித்ரத் வந்த உடனேயே கண்டுவிட்டான். அவன் சந்தேகம் பலத்தது. அதை பார்த்ததும் ஜெனிக்கு மட்டுமல்ல என்கிடுவுக்கும் அதிர்ச்சி தான்.

“இப்போ சொல்லு இவ நம்ம எதிரியோட ஆளு என்று நல்லாவே தெரிஞ்சிட்டு கொன்னுடலாமே நீயே அவ கழுத்தை நரிச்சி கொன்னுடு.”

என்றான். என்கிடு தடுமாறுவதை கண்டு மித்ரத் அதிர்ச்சி அடைந்தான்.

“சரி… பொண்ணுங்க… என்பதால் நீ தயங்குற என்று நினைக்கிறேன் நானே இவள.”

என்று துப்பாக்கியை நீட்டவும் அபாயமனி ஓசையும் கேட்டது.

“யாரோ நம்ம எதிரிகள் காம்பவுண்ட்குள்ள வந்துட்டாங்க என்கிடு இவளை பார்த்துக்கே.”

என்று விட்டு மித்ரத்தும் அவனுடைய ஆட்களும் வெளியே ஓடினர்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

“என்னது நானா இங்க ஒன்றும் வரல்ல… உங்க ஆளுதான் என்னை இங்க தூக்கிட்டு வந்தாரு… நான் இங்கே இருந்து போக போனதும்… இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு இங்கேயே இருக்கும் படி மிரட்டினாரு… அதனால…

“என்னது நானா இங்க ஒன்றும் வரல்ல… உங்க ஆளுதான் என்னை இங்க தூக்கிட்டு வந்தாரு… நான் இங்கே இருந்து போக போனதும்… இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு இங்கேயே இருக்கும் படி மிரட்டினாரு… அதனால…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *