எதிர் பார்ப்பின் விழித்தோன்றல்கள் பகுதி 17

  • 10

“அஸ்ஸலாமு அலைக்கும்…”

“வ அலைக்குமுஸ்ஸலாம்

“வாங்க வாங்க”

என்று சுபைதாவின் அழைப்பை ஏற்று வீட்டுக்குள் சாராவும் பாத்திமாவும் நுழைய ருஷா புன் சிரிப்புடன் வரவேற்றாள். நிசாத் காரை நிப்பாட்டி விட்டு காரினுள் இருந்தான்.இதை அறிந்த ரோசன் வெளியில் சென்று மச்சனோடு கதை தொடுத்தான். உள்ளே போன சாராவும் பாத்திமாவும் கொண்டு போன சாமான்களை வெளியில் எடுத்து,

“ருஷா இது நீங்க நாளைக்கு போட்டு வர வேண்டிய உடுப்பு நீங்க போட்டு வாங்க பங்ஸன் அசருக்கு தான் ஆனா காவின் ஏழுதிட்டு நீங்க வீட்ட வந்தா சரி கார் வரும்…”

“ம்ம்…”

என்று தலையாட்டிய படி இருந்தாள்.

“மாமி இது ரோசனுக்கு, இன்னாங்க. இது உங்களுக்கு”

என்று வகைப்படுத்தி கொடுத்து விட்டு வந்ததும் போக ரெடி ஆகினர். அப்போது சுபைதா,

“இருங்க டீ குடிச்சுட்டு போகலாம்”

என்று தடுக்க,

“இல்ல நிசாத் வெளில சரில்ல நாங்க கொடுத்துட்டு போக தான் வந்த”

என்று வெளிச் செல்ல சுபைதா வழி அனுப்பினார். சுபைதாவும் ரோசனும் வீட்டினுள் நுளைய,

“என்ன ராத்தா சொப் வீட்ல வந்த மாறி இருக்கு…”

என கிட்ட,

“ரோசன் கிண்டல் பண்றத்த விட்டுடு அளவ பாரு உடுப்பப் போட்டு”

உம்மா பகல் எல்லாம் அளவு சொல்லிடன் சரியா தான் இருக்கும்

என்று ருஷா சொல்ல

“பாஹ் பொறுப்பை பாருங்க உம்மா ராத்தாட”

“ஓஹ் மகன் நமக்கு தெரியாம எல்லாம் அப்போ வேல நடக்குது போல,”

“ஓஹ் ம்ம்மா… “

என்று ரோசன் சொல்ல,

“உம்மா அப்படி இல்ல.”

என்று கவலையாய் முகம் தொங்க போட,

“ஆஹ் சும்மா பேசின மகள்.”

“ரோசன் சேட் அளவு எல்லாம் சரியா??”

“எஸ் மாம் எல்லாம் கரெக்ட். நல்லா தான் இருக்கு மச்சான்ட செலக்ஸன்.”

“உம்மா அது புரோக் எனக்கு போட்டு போக உம்மா… கோல்ட் என்ட் பிங்க்…”

“வாவ் நைஸ் செலக்ஸன்..”

“உம்மா இங்க பாருங்க உம்மா தம்பி கிட்றான்.”

“நான் எங்க உம்மா கிட்டின…”

“சரி சரி சண்ட போடாதீங்க. நாளைக்கு மட்டும் தானே”

என்று சுபைதா சொல்ல, சொன்னது தான் தாமதம். எதிர் பாராத விதமாய்,

தொடரும்….
K.Fathima Risama
Nintavur.
SEUSL.
வியூகம் வெளியீட்டு மையம்

“அஸ்ஸலாமு அலைக்கும்…” “வ அலைக்குமுஸ்ஸலாம் “வாங்க வாங்க” என்று சுபைதாவின் அழைப்பை ஏற்று வீட்டுக்குள் சாராவும் பாத்திமாவும் நுழைய ருஷா புன் சிரிப்புடன் வரவேற்றாள். நிசாத் காரை நிப்பாட்டி விட்டு காரினுள் இருந்தான்.இதை அறிந்த…

“அஸ்ஸலாமு அலைக்கும்…” “வ அலைக்குமுஸ்ஸலாம் “வாங்க வாங்க” என்று சுபைதாவின் அழைப்பை ஏற்று வீட்டுக்குள் சாராவும் பாத்திமாவும் நுழைய ருஷா புன் சிரிப்புடன் வரவேற்றாள். நிசாத் காரை நிப்பாட்டி விட்டு காரினுள் இருந்தான்.இதை அறிந்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *