எதிர் பார்ப்பின் விழித்தோன்றல்கள் பகுதி 25

  • 13

இறைவன் அடி வானம் வந்து தன்னை நினைக்கும் அடியார்களுக்கு அள்ளி கொடுக்க காத்திருக்கும் தஹஜத் நேரம் அது உளூ செய்து விட்டு,

“ஹபி ஹபி…. எழும்புங்க”

“ம்ம்.. என்ன ருஷா..”

“தஹஜத் டைம் ஆகிடு தொழனும் எழும்புங்க..”

“ஆஹ்”

என்று எழும்பி உளு செய்து வர, நிசாத்தும் ருஷாவும் தொழுது விட்டு, ருஷா குர்ஆன் ஓத அவள் குரலோடு ஓதலை கேட்டு கொண்டு இருந்தான். குரான் ஓதி முடிந்ததும் சுபஹ் அதான் சொல்ல, நிசாத் மஸ்ஜித் சென்றான். ருஷா வீட்டில் தொழுது விட்டு தன் கணவனின் வருகைக்கு இளம் சூட்டு டி உடன் தன் அன்பையும் சேர்த்து தன் கணவனின் வருகைக்கு காத்துக் கொண்டு இருந்தாள்.

நிசாத் வர, நிசாத்துக்கு டீ பரிமாறி விட்டு தானும் அருந்தி கொண்டு இருந்தாள். வானம் விடியலை நோக்கி கொண்டு வருகின்ற நேரம் மனதும் மூளையும் அமைதி கொண்ட நேரம். நிசாத்தும் ருஷாவும் மனம் விட்டு தங்கள் வாழ்க்கை பயணம் பற்றி பேசி கொண்டு இருக்கின்றார்கள்.

“ஹபி எனக்கு வெர்க் பண்ண ஐடியா இருக்கு…”

“ம்ம்.. அதுக்கு என்ன மா… நீங்க படிச்ச படிப்புக்கு ஏற்ற மாதிரி வெர்க் பண்ணுங்க… இங்க தடை ஒன்னும் இல்லயே.”

பெண்களுக்கு எதுக்கு வேலை என்று இருக்கும் ஆண்களுக்குள் நிசாத் தன் மனைவியை மதித்து அவளுக்கு துணையாய் நிற்கும் ஒரு சிறந்த ஆணவனாய் இருந்தான்.

“கல்யாணம் முடித்தால் பெண்ணுக்கு அடுப்படி, நீ படிச்சா பிள்ளைக்கு படிச்சு கொடு, என்று பெண்ணை மட்டம் தட்டும் ஆண்களுக்குள் நீங்க எனக்கு கிடைச்சதுக்கு நான் அல்லாஹ்க்கு இன்னமும் நன்றி செலுத்தனும் ஹபி.”

அல்லாஹ் என்ன மா தங்கம் இப்படி பேசுற, ஒரு கேள் படிக்கும் போது எவ்வளவு கற்பனையோட படிப்பாள். அத அவளை வெட் பண்ற கணவன் புரிஞ்சு தன்ட மனைவிக்கு எல்லா வகையிலும் ஹெல்பா இருக்கனும் டா. ஒரு மனைவியை கணவனும், ஒரு கணவனை மனைவியும் சரியா புரிஞ்சா டிவோஸ் என்ற பேச்சுக்கு இடம் இல்லாம இருக்கும். சோ என்ட தங்கம் எப்போவும் சந்தோசமா இருக்கணும்.

என்று தன் மனைவியின் நெற்றியில் முட்டிக் கொண்டான். தன் கணவன் பேச்சு கேட்ட ருஷா கண் கலங்க கண்ணீரை துடைத்த நிசாத்,

“ருஷா இதுக்கு போய் அழுரியே மா… இப்போ சின்ன பிள்ள கூட அழுற இல்ல.. ஆனா பாரு என் ருஷா பேபி…”

என்று சொல்ல ருஷா சிரித்துக்கொண்டு ஆஹ் போதும் உங்க ஐஸ் நான் போய் ரெஸ் அயன் பண்றன் குளிச்சுட்டு வாங்க ஆபிஸ் போக என்று சொல்லி சென்றாள் ருஷா.

தொடரும்….
K.Fathima Risama
Nintavur.
SEUSL.
வியூகம் வெளியீட்டு மையம்

இறைவன் அடி வானம் வந்து தன்னை நினைக்கும் அடியார்களுக்கு அள்ளி கொடுக்க காத்திருக்கும் தஹஜத் நேரம் அது உளூ செய்து விட்டு, “ஹபி ஹபி…. எழும்புங்க” “ம்ம்.. என்ன ருஷா..” “தஹஜத் டைம் ஆகிடு…

இறைவன் அடி வானம் வந்து தன்னை நினைக்கும் அடியார்களுக்கு அள்ளி கொடுக்க காத்திருக்கும் தஹஜத் நேரம் அது உளூ செய்து விட்டு, “ஹபி ஹபி…. எழும்புங்க” “ம்ம்.. என்ன ருஷா..” “தஹஜத் டைம் ஆகிடு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *