ஹிஜாப்

  • 21

ஹிஜாப் பெண்ணியத்தின் கண்ணியத்தை காக்கும் ஒரு கேடயமாகும். இன்று சமூகத்தில் பெண்கள் சுதந்திரமாக தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வது நெருப்பின் மேல் நடப்பதை விட வலி மிகுந்தது. இந்த சூழலில் பெண்ணின் பாதுகாப்பு பற்றி சிந்திக்க வேண்டிய கடப்பாடு எம் அனைவருக்கும் உண்டு.

பெண் சுதந்திரம் மட்டுமன்றி அவளிற்கான பாதுகாப்பு அனைத்தையும் பற்றி இஸ்லாம் தெளிவாக விளக்கியுள்ளது. அவை தற்காலத்திற்கு மிகவும் பொருத்தமானதாக உள்ளது எனலாம். அந்த வகையில் இஸ்லாம் கூறும் ஒவ்வொன்றையும் நாம் மதரீதியில் சிந்திப்பதை விட்டுவிட்டு அதன் உண்மை தன்மைகளை ஆராய்ந்து பார்த்தால்தான் இஸ்லாம் கூறுவதில் என்ன நன்மையுள்ளது என்பதை விளங்க முடியும். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஹிஜாப்.

அல்லாஹ் தன் திருமறையில் குறிப்பிடுகின்றான்.

‎ﭧ ﭨ ﭽوَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى

‘நீங்கள் உங்கள் இல்லங்களிலேயே (அடக்கத்துடன்) இருங்கள். முன் வாழ்ந்த அறியாமை கால மக்கள் (தங்களின் அலங்காரங்களை வெளியில்) காட்டி வந்ததைப் போல் உங்களின் வனப்பை வெளிக்காட்டிக் கொண்டு) திரியாதீர்கள்’ (அல்குர்ஆன் 33:33)

பார்வையை தாழ்த்திக் கொள்ளுங்கள்

‎ﭧ ﭨ ﭽ وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ

‘அவர்கள் தங்கள் பார்வையை கீழ்நோக்கியே வைத்து, கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும்.’ (அல்குர்ஆன் 24:31)

என்ற இறைவசனத்தின் மூலம் உத்தரவிட்டது. பாவங்களில் பெரும்பாலனவை பார்வையாலேயே நிகழ்கின்றன. தீய பார்வையால் தீய உணர்வுகள் ஏற்பட்டு பாவமான காரியங்களில் ஈடுபடுகிறார்கள். அந்த தீய உணர்வே ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளவே ‘பார்வையை தாழ்த்தி கற்பைக் காத்துக் கொள்ளவும்’ என அருள்மறை கூறுகிறது.

கண்களினால் விபரீதங்கள் ஏற்படும் என்பதை முன்னெச்சரிக்கை செய்வதற்காகவே,

‘கண்களும் விபச்சாரம் செய்கின்றன. கண்களின் விபச்சாரம் பார்வை’ என்றார்கள் கருணை நபி(ஸல்) அவர்கள். ஜரீர் இப்னு அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம், திடீரெனப்படும் பார்வையைப் பற்றிக் கேட்டபோது, ‘உம் பார்வையை (உடனேயே) திருப்பிக் கொள்ளும்’ என சட்டெனப் பதில் சொன்னார்கள். திடீர் பார்வை தீய எண்ணம் எதுவுமின்றி ஏற்படுவதால் குற்றமில்லை. அதைத் தொடர்ந்து மீண்டும் பார்க்கும் பார்வைதான் பாவமானது என்றார்கள்.

மனிதன் தான் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பொறுப்பேற்கிறான். ‘நிச்சயமாக காது, கண், இருதயம் ஆகிய ஒவ்வொன்றுமே (அதனதன் செயலைப்பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும் (அல்குர்ஆன் 17:36)

என்ற இறைவசனம் இங்கு சிந்திக்க தக்கதாகும்.

பர்தா (ஹிஜாப்)வுடைய ஆயத் அருளப்பட்ட வேளை, ஒரு நாள் நபி நாயகம்(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியரான உம்முஸல்மா(ரலி), மைமூனா(ரலி) ஆகியோருடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே கண் தெரியாத அப்துல்லாஹ் இப்னு உம்முமக்தும் வந்தார்கள். உடனே அவ்விருவரையும் வீட்டினுள் செல்லுமாறு உத்தரவிட்டார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.

‘அவருக்குத்தான் கண் தெரியாதே! எங்களைப் பார்க்கவும் தெரிந்து கொள்ளவும் முடியாதே! யாரஸுலல்லாஹ்!’ எனக் கேட்டார்கள் மனைவியர் இருவரும். ‘சரிதான், நீங்களிருவரும் குருடர்கள் இல்லையல்லவா? நீங்கள் அவரைப் பார்க்க மாட்டீர்களா? எனத் திருப்பிக் கேட்டதும் உள்ளே சென்று மறைந்து கொண்டார்கள். (திர்மிதீ, நஸயீ, அபூதாவூது)

இவ்வாறு இஸ்லாம் இதனை விளக்குகின்றது. ஹிஜாப் என்பது பெண்கள் தங்களது அவ்றத்தினை மறைத்து கொள்ள அணியும் ஆடை ஆகும். இன்று இது பற்றி பல விதமான தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. கறுப்பு நிறம் மட்டும் தான் ஹிஜாப் என்ற ஒரு தவறான எண்ணம் பலர் மததியில் பதியப்பட்டுள்ளது. இது தவறான சிந்தனை அது மட்டுமன்றி பன்மைத்துவ சூழலில் வாழும் பலர் இது பற்றிய சரியான புரிதல் இன்றியே காணப்படுகின்றனர். உடலை வெளிக்காட்டாமல் அவ்றத்தை மறைத்து எந்த நிறத்திலும் ஒரு பெண் ஆடை அணிய முடியும் இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும். ஹிஜாப் பெண்ணினத்தின் அடையாளம் அது என்றும் சிதைக்கப்படாமல் இருக்க வேண்டும்.

றஹ்னா பின்த் மகுனதுர் ரஹ்மான்(ஹுதாயிய்யா)
இலங்கை தென் கிழக்கு பல்கலைகழகம்
மருதமுனை

ஹிஜாப் பெண்ணியத்தின் கண்ணியத்தை காக்கும் ஒரு கேடயமாகும். இன்று சமூகத்தில் பெண்கள் சுதந்திரமாக தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வது நெருப்பின் மேல் நடப்பதை விட வலி மிகுந்தது. இந்த சூழலில் பெண்ணின் பாதுகாப்பு பற்றி சிந்திக்க…

ஹிஜாப் பெண்ணியத்தின் கண்ணியத்தை காக்கும் ஒரு கேடயமாகும். இன்று சமூகத்தில் பெண்கள் சுதந்திரமாக தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வது நெருப்பின் மேல் நடப்பதை விட வலி மிகுந்தது. இந்த சூழலில் பெண்ணின் பாதுகாப்பு பற்றி சிந்திக்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *