இவ்வுலகம் வரக் காரணமான தேவதையின் வலிகள் இது!
- by admin
- 9
முகரிந்த தாய்மைக்கு
நான் அறிந்தவைகளைக்
கூறினால் இங்குள்ள
மானிடப் பிறவிகள்
திருந்திடப் போகுமா!
சில மாதங்கலாய்
சுமந்திருந்தாலும் உன்னை.
பல யுகங்கள்
கடந்து போன
சுகத்தினை பெற்று
இருப்பாள் தாய்மையினை
உணர்ந்து போனதால்!
கண்ணீரை தன்னுள்
புதைத்து இருந்தவள்,
அவள் ஆசைகளையும்
புதைத்து எறிந்து
போனால் நீ
அழுது போன
இடங்கள் எல்லாம்!
அவள் கை
பிடித்து நடந்து
போன உனக்கு
புன்னகை வந்தது
அன்று உனக்கு
அவள் உன்
கை பிடித்து
நடந்து போனால்
கூச்சம் வரக்
காரணம் யாதோ!
அவள் பட்ட
துன்பங்களைக் கூறினால்
பரிதாபமாய் நீ
இறந்துவிடுவாய் இதயம்
வெடித்தபடி!
நீங்கள் உணர்ந்து
கொள்ளாவிடின் பரவாயில்லை
தாய்மைக்கு மதிப்பழித்து
நடந்து கொள்ளுங்கள்
தாய் அவள்
தெய்வம் என!
பொத்துவில் அஜ்மல்கான்
முகரிந்த தாய்மைக்கு நான் அறிந்தவைகளைக் கூறினால் இங்குள்ள மானிடப் பிறவிகள் திருந்திடப் போகுமா! சில மாதங்கலாய் சுமந்திருந்தாலும் உன்னை. பல யுகங்கள் கடந்து போன சுகத்தினை பெற்று இருப்பாள் தாய்மையினை உணர்ந்து போனதால்! கண்ணீரை…
முகரிந்த தாய்மைக்கு நான் அறிந்தவைகளைக் கூறினால் இங்குள்ள மானிடப் பிறவிகள் திருந்திடப் போகுமா! சில மாதங்கலாய் சுமந்திருந்தாலும் உன்னை. பல யுகங்கள் கடந்து போன சுகத்தினை பெற்று இருப்பாள் தாய்மையினை உணர்ந்து போனதால்! கண்ணீரை…